மற்றுமொரு தோல்வியடைந்த அரசாங்கத்தை எதிர்கொள்வதற்கு இலங்கைக்கு திராணியில்லை : அலி சப்ரி

Thursday, May 8th, 2025 at 7:44 (SLT)

‘ஊடகக் கண்காட்சியை’ நடாத்துவதன் ஊடாக எப்போதும் நாட்டை ஆழமுடியும் என கருதியிருந்தால், அது முற்றிலும் தவறானதாகும். இலங்கையின் கடந்தகால அரசாங்கங்கள் அடுத்தடுத்து தோல்வி கண்டிருக்கும் நிலையில், மீண்டுமொரு தோல்வியடைந்த அரசாங்கத்தை எதிர்கொள்வதற்கு இலங்கைக்குத் திராணியில்லை. எனவே தற்போதைய அரசாங்கம் சிறப்பாக செயற்படவேண்டுமாயின், அவர்கள் பேசுவதைக் குறைத்து, அதனை செயலில் காண்பிக்கவேண்டும் என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி வலியுறுத்தியுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

இப்போது பாராளுமன்றத் தேர்தலை நடத்திக் காட்டுங்கள் தலதா அத்துகோரள அரசாங்கத்துக்கு சவால்

Thursday, May 8th, 2025 at 7:40 (SLT)

அரசாங்கம் பொதுத் தேர்தலில் பெற்றுக் கொண்ட வாக்குகளில் பெருந்தொகையை இழந்திருக்கிறது. சரியென்றால் இப்போதாவது அரசாங்கம் பதவி விலக வேண்டும். எனவே இப்போது பாராளுமன்றத் தேர்தலை நடத்திக் காண்பிக்குமாறு சவால் விடுகப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அத்துகோரள தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

தமிழரசுக்கட்சி பலவீனமடையவில்லை தமிழ்த்தேசிய கூட்டமைப்பாக சேர்ந்து இருந்ததை விட தற்போது தனியாக பலமாக வெளிவந்திருக்கின்றது : எம் ஏ சுமந்திரன்

Wednesday, May 7th, 2025 at 12:05 (SLT)

இலங்கை தமிழரசுகட்சி பலவீனமடையவில்லை தமிழ்தேசிய கூட்டமைப்பாக சேர்ந்து இருந்ததை விட தற்போது தனியாக பலமாக வெளிவந்திருக்கின்றது எனஇலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம் ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

போலி பொலிஸ் அதிகாரிகள் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை

Wednesday, May 7th, 2025 at 12:01 (SLT)

பொலிஸ் அதிகாரிகள் என கூறி பல்வேறு பிரதேசங்களில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு பொதுமக்களிடமிருந்து பெறுமதியான பொருட்களை அபகரிக்கும் கும்பல் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

போர் துவங்கியது : பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல், எட்டுப் பேர் பலி

Wednesday, May 7th, 2025 at 8:09 (SLT)

பாகிஸ்தான் மீது இந்தியா ஏவுகனை தாக்குதலை மேற்கொண்டுள்ளது. ஒபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று அதிகாலை முதல் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய இராணுவம் பயங்கரவாதிகள் தங்கியிருந்த இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது.

மேலும் வாசிக்க >>>

இந்தியஏவுகணை தாக்குதல்கள் – பொதுமக்கள் எட்டுபேர் பலி : பாக்கிஸ்தான்

Wednesday, May 7th, 2025 at 8:06 (SLT)

இந்தியாவின் ஏவுகணை தாக்குதல்கள் காரணமாக பொதுமக்கள் 8பேர்கொல்லப்பட்டுள்ளனர் என பாக்கிஸ்தான் தெரிவித்துள்ளது. பாக்கிஸ்தானின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள முசாபராபாத்தில் இந்திய விமானப்படை மேற்கொண்ட தாக்குதலில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக பாக்கிஸ்தான் தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

ஒப்பரேஷன் சிந்தூர் : பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தாக்குதலை ஆரம்பித்தது இந்தியா : 9 முகாம்கள் மீது திடீர் தாக்குதல்

Wednesday, May 7th, 2025 at 8:03 (SLT)

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய இராணுவத்தினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

மேலும் வாசிக்க >>>

துப்பாக்கியால் தன்னைதானே சுட்டு உயிர்மாய்த்த பொலிஸ் சார்ஜன்ட்

Tuesday, May 6th, 2025 at 12:20 (SLT)

அம்பாறை, பதியதலாவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர், தனது சேவை துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு உயிர்மாய்த்துக் கொண்டுள்ளார். இந்த சம்பவம் இன்று (06) அதிகாலை 05.20 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மேலும் வாசிக்க >>>

அல்காட்ராஸ் சிறைச்சாலையை மீண்டும் திறக்க ட்ரம்ப் உத்தரவு

Tuesday, May 6th, 2025 at 12:16 (SLT)

கலிபோர்னியா கடற்கரையில் அமைந்துள்ள ஒரு தீவில் உள்ள முன்னாள் சிறைச்சாலையான அல்காட்ராஸை (Alcatraz) மீண்டும் திறந்து விரிவுபடுத்த தனது அரசாங்கத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

20 ஆவது ஐக்கிய நாடுகளின் வெசாக் தின கொண்டாட்டங்களில் பிரதம விருந்தினராக ஜனாதிபதி பங்கேற்பு

Tuesday, May 6th, 2025 at 12:12 (SLT)

வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங் இன் அழைப்பின் பேரில் வியட்நாமிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இன்று செவ்வாய்க்கிழமை(06) ஹோ சி மின் நகரில் ஆரம்பமாகும் 20 ஆவது ஐக்கிய நாடுகளின் வெசாக் தின கொண்டாட்டங்களில் பிரதம விருந்தினராகப் பங்கேற்று பிரதான உரையை நிகழ்த்தி உள்ளார்.

மேலும் வாசிக்க >>>

அதிவேக நெடுஞ்சாலையில் பேருந்துகளை நிறுத்திய சம்பவம் : சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கை

Tuesday, May 6th, 2025 at 12:10 (SLT)

மே தினத்தன்று கொழும்பில் நடைபெற்ற ஒரு முக்கிய அரசியல் கட்சி பேரணிக்கு மக்களை ஏற்றிச் சென்ற பேருந்துகளை அதிவேக நெடுஞ்சாலையில் நிறுத்தியதற்கு பேருந்து சாரதிகளே முழுப் பொறுப்பு என்று காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

கட்டுநாயக்க பகுதியில் துப்பாக்கி பிரயோகம் : ஒருவர் காயம்

Tuesday, May 6th, 2025 at 12:08 (SLT)

கட்டுநாயக்க பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மேலும் வாசிக்க >>>

புத்தரின் புனித எச்சங்களுடன் மீட்கப்பட்ட மாணிக்கங்கள் : ஏலத்தை நிறுத்த இந்தியா கோரிக்கை

Tuesday, May 6th, 2025 at 12:06 (SLT)

புத்தரின் புனித எச்சங்களுடன் புதைக்கப்பட்டிருந்த மாணிக்கங்கள் மற்றும் பிற கல் அணிகலன்களின் தொகுதியை ஏலத்தில் விற்பனை செய்வதை உடனடியாக நிறுத்தி, அந்த கலைப்பொருட்களை இந்தியாவிற்கு திருப்பி அளிக்குமாறு கோரி, ஹொங்கொங்கில் உள்ள சோதேபி’ஸ் ஏல நிறுவனத்திற்கு இந்தியா சட்டரீதியான அறிவிப்பு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

மேலும் வாசிக்க >>>

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை சம்பவம் தொடர்பில் மேலும் இரு மாணவர்கள் கைது

Tuesday, May 6th, 2025 at 12:03 (SLT)

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொழில்நுட்ப பீட மாணவர்களுக்கு பகிடிவதை வழங்கிய சம்பவம் தொடர்பாக மேலும் இரு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

வெளிநாடு ஒன்றில் தமிழர்கள் மூவருக்கு மரண தண்டனை

Monday, May 5th, 2025 at 10:05 (SLT)

இந்தோனேஷியாவில் போதைப் பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் மூன்று தமிழர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அவர்களுக்கு தேவையான சட்ட உதவிகளை வழங்கும்படி, அங்கு உள்ள இந்திய துாதரகத்திற்கு டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>