காணி விடுவிப்பு என்பது தமிழ் மக்களின் வாக்குகள் சூறையாடுவதற்கான வியூகமே தவிர அது ஒரு மக்கள் நலன் சார் விடயம் அல்ல : தொழிலதிபர் சுலக்சன்

Friday, May 2nd, 2025 at 9:43 (SLT)

காணி விடுவிப்பு என்பது தமிழ் மக்களின் வாக்குகள் சூறையாடுவதற்கான வியூகமே தவிர அது ஒரு மக்கள் நலன் சார் விடயம் அல்ல என தொழிலதிபர் சுலக்சன் தலைமையிலான சுயேச்சைக் குழு தெரிவித்துள்ளது. யாழ் ஊடக அமையத்தில் தொழிலதிபர் சுலக்சன் அவரது சுயேச்சைக்குழுவின் பேச்சாளர் விஜயகாந்த், வேலணை பிரதேச சபையின் முதன்மை வேட்பாளர் சி.சிவநேசன் ஆகியோர் ஊடக சந்திப்பை மேற்கொண்டிருந்தனர்.

மேலும் வாசிக்க >>>

உலகின் மிகவும் வயதான நபர் காலமானார்

Friday, May 2nd, 2025 at 9:38 (SLT)

உலகின் மிகவும் வயதான நபரான பிரேசிலிய கன்னியாஸ்திரி இனா கனபரோ லூகாஸ், தமது 116 ஆவது வயதில் காலமானார். இவர் 1908 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 8 ஆம் திகதி பிறந்துள்ளார். 1934-ம் ஆண்டு தனது 26 வயதில் கன்னியாஸ்திரியாகியுள்ளார். இனாஹ் கனாபாரோ உடல்நலக்குறைவு காரணமாக புதன்கிழமை (30) உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

தமிழ் மக்களை நாம் புறக்கணிக்க போவதில்லை : அவர்கள் சுதந்திரமாக வாழும் உரிமையை உறுதிப்படுத்துவோம் : ஜனாதிபதி

Friday, May 2nd, 2025 at 9:31 (SLT)

தேசிய நல்லிணக்கமில்லாமல் நாடு என்ற ரீதியில் முன்னேற்றமடைய முடியாது. தமிழ் மக்கள் பாரம்பரியமான அரசியல் தரப்பினரை முழுமையாக புறக்கணித்து எம்மை தெரிவு செய்துள்ளார்கள். தமிழ் மக்களை நாங்கள் புறக்கணிக்க போவதில்லை. அவர்களின் அரசியல், மொழி மற்றும் பாரம்பரிய காணி உரிமை, சுதந்திரமாக வாழும் உரிமை மற்றும் அடிப்படை உரிமைகளையும் நாங்கள் உறுதிப்படுத்துவோம் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு எரிந்த நிலையில் சடலம் மீட்பு

Friday, May 2nd, 2025 at 9:25 (SLT)

கல்கிஸ்ஸை – ஹுலுதாகொட பகுதியில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு எரிந்த நிலையில் நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.குறித்த சம்பத்தில் உயிரிழந்தவர் இரத்மலானை – மஹிந்தாராம பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய கவிந்த கயாஷான் எனப்படும் டிகிரா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

பிள்ளையான் சிறையில் இருப்பது கொடுமையானது : கருணா

Thursday, May 1st, 2025 at 11:02 (SLT)

பிள்ளையான் சிறையில் இருப்பது கொடுமையான விடயமாகும் என முன்னாள் பிரதியமைச்சரும், தமிர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவருமான வினாயகமூர்த்தி முரளிதரன்(கருணாஅம்மான்) தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

ரணிலின் தலைமை பாதுகாப்பு அதிகாரிக்கு உடனடி இடமாற்றம்

Thursday, May 1st, 2025 at 10:57 (SLT)

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமை பாதுகாப்பு அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த இடமாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

யாழ்.போதனா வைத்தியசாலையில் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் பணிப்புறக்கணிப்பு

Thursday, May 1st, 2025 at 10:55 (SLT)

பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து யாழ்.போதனா வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். யாழ். போதனா வைத்தியசாலையில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டு வரும் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் தமக்கு, சம்பள உயர்வு கோரியும்,

மேலும் வாசிக்க >>>

இன்று சர்வதேச தொழிலாளர் தினம்

Thursday, May 1st, 2025 at 10:52 (SLT)

சர்வதேச தொழிலாளர் தினம் இன்று (01) கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மே 1 அன்று, தொழிலாளர் தினத்தை நாம் கொண்டாடுகிறோம், இது மே தினம் அல்லது சர்வதேச தொழிலாளர் தினம் என்றும் அழைக்கப்படுகிறது. தொழிலாளர்கள் மற்றும் தொழிலாளர் இயக்கத்தின் பங்களிப்புகள் இந்த நாளில் நினைவு கூரப்படுகிறது. உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பையும் அங்கீகரிக்க இந்த நாள் ஒரு சிறந்த வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது.

மேலும் வாசிக்க >>>

தீவிரமாக பரவும் டெங்கு நோய்

Thursday, May 1st, 2025 at 10:51 (SLT)

இந்த ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் இதுவரை 17,459 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் மாத்திரம் 5,018 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக அதன் பணிப்பாளர், வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

பாகிஸ்தானில் நேற்று இரவு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது

Thursday, May 1st, 2025 at 10:48 (SLT)

பாகிஸ்தானில் நேற்று இரவு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இரவு 9.58 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவானது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

எரிபொருள் விலையைக் குறைத்தாலும், முச்சக்கர வண்டி கட்டணத்தில் மாற்றத்தை அறிவிக்க முடியாது

Thursday, May 1st, 2025 at 10:46 (SLT)

அரசாங்கம் எரிபொருள் விலையைக் குறைத்தாலும், முச்சக்கர வண்டி கட்டணத்தில் மாற்றத்தை அறிவிக்க முடியாது என்று அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர, ஒவ்வொரு சங்கமும் முச்சக்கர வண்டி கட்டணத்தை அறிவிக்க அனுமதிக்காமல், அரசாங்கமே அதை தீர்மானிக்க வேண்டும் என்றார்.

மேலும் வாசிக்க >>>

திட்டமிட்டு இடம்பெற்ற கொலை : தப்பியோடிய சந்தேகநபர் கைது

Thursday, May 1st, 2025 at 10:44 (SLT)

கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக லுணுகம்வெஹெர பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 67 வயதான அக்கரகல்கொட லுணுகம்வெஹெர பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

சர்வதேச நாணய நிதியத்தின் அடுத்த கடன் தவணையை பெற இலங்கை காத்திருக்க வேண்டும்

Thursday, May 1st, 2025 at 10:39 (SLT)

சர்வதேச நாணய நிதியத்தின் அடுத்த கட்ட கடன் தவணையைப்பெற இலங்கை சில மாதங்கள் காத்திருக்க வேண்டிவரும் என சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கு கடன் வழங்கும் குழுவின் தலைமை அதிகாரி இவான் பபஜெர்ஜியோ தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

இன்று மே தினம் ! பிரதான அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களால் முன்னெடுக்கப்படவுள்ள கூட்டங்கள்

Thursday, May 1st, 2025 at 10:35 (SLT)

சர்வதேச தொழிலாளர் தினம் அல்லது மே தினம் இன்று வியாழக்கிழமை (1) முன்னெடுக்கப்படுகின்ற நிலையில் அரசியல் கட்சிகள் தமது பலத்தினை மக்களுக்கு காண்பிக்கும் வகையில் பேரணிகள் மற்றும் கூட்டங்கள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும் வாசிக்க >>>

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் தடம்புரண்ட ரயில்

Thursday, May 1st, 2025 at 10:32 (SLT)

கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்தில் இன்று வியாழக்கிழமை (01) ரயில் ஒன்று ரயில் தடம்புரண்டதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.மட்டக்களப்பிலிருந்து கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தை நோக்கிப் பயணித்த ரயில் ஒன்றே இவ்வாறு தடம்புரண்டது.

மேலும் வாசிக்க >>>