தேர்தலுக்கு பிந்தைய காலம் தொடர்பில் விசேட அறிவிப்பு

Saturday, November 16th, 2024 at 16:07 (SLT)

பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து ஒரு வாரத்திற்கு தேர்தலுக்கு பிந்தைய காலம் அமுலில் இருக்கும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இது தொடர்பான விடயங்களை தெளிவுபடுத்திய பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான சட்டத்தரணி நிஹால் தல்துவ, தேர்தலுக்குப் பின்னரான காலப்பகுதியில் நாடு முழுவதும் பொலிஸார் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

பாடசாலையின் விஞ்ஞான ஆய்வுக் கூடத்தில் தீ விபத்து

Saturday, November 16th, 2024 at 11:06 (SLT)

மாத்தளை – உக்குவெல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் விஞ்ஞான ஆய்வுக் கூடம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக மாத்தளை பொலிஸார் தெரிவித்தனர். இந்த தீ விபத்து நேற்று வெள்ளிக்கிழமை (15) இரவு 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மேலும் வாசிக்க >>>

ரயில் – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து : தந்தை பலி மகன் காயம்

Saturday, November 16th, 2024 at 11:00 (SLT)

அநுராதபுரம், ஹபரணை, பெல்லன்கடவல பிரதேசத்தில் உள்ள ரயில் கடவையில் மோட்டார் சைக்கிள் ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் தந்தை உயிரிழந்துள்ளதுடன் மகன் காயமடைந்துள்ளதாக ஹபரணை பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் வாசிக்க >>>

மறுமலர்ச்சி யுகத்துக்கு தோள் கொடுத்த அனைவருக்கும் நன்றி : ஜனாதிபதி

Saturday, November 16th, 2024 at 10:55 (SLT)

மறுமலர்ச்சி யுகத்தை ஆரம்பிக்க தோள் கொடுத்த அனைவருக்கும் நன்றி என அநுரகுமார திசாநாயக்க நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தி பொதுத்தேர்தலில் அமோக வெற்றிப் பெற்றுள்ளதை தொடர்ந்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது உத்தியோகபூர்வ எக்ஸ் வலைத்தளத்தில் நன்றி தெரிவித்து பதிவேற்றம் செய்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

தேர்தலில் பெரும் வெற்றி ஆழமான சீர்திருத்தங்களிற்கான ஆணை உலக நாடுகள் ஆதரவளிக்கவேண்டும் : எரிக்சொல்ஹெய்ம்

Saturday, November 16th, 2024 at 10:52 (SLT)

இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் அரசாங்கத்திற்கு கிடைத்துள்ள மகத்தான பெரும் வெற்றி ஆழமான சீர்திருத்தங்களிற்கான ஆணையை வழங்குகின்றது என இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவர் எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பகுதியில் மாடு கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கும் வாகனம் மடக்கி பிடிப்பு

Saturday, November 16th, 2024 at 10:48 (SLT)

மாடுகளை கடத்தி செல்வதற்கு பயன்படுத்தபட்டதாக சந்தேகிக்கப்படும் வாகனத்தினை முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பகுதியில் வைத்து இளைஞர்கள் மடக்கி பிடித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (15) இரவு இடம்பெற்றுள்ளது.

மேலும் வாசிக்க >>>

நாடளாவிய ரீதியில் இடியுடன் கூடிய மழையும் மின்னல் தாக்கங்களும் ஏற்படலாம்

Saturday, November 16th, 2024 at 10:43 (SLT)

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு வளிமண்டலவியல் நிலைமைகள் மேலும் உகந்ததாகக் காணப்படுகின்றது. இதன்போது இடியுடன் கூடிய மழையும் பலத்த மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் பொது மக்கள் அவதானத்துடன் செயற்பட்டு இழப்புகளை அல்லது சேதங்களை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர் என சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார்.

மேலும் வாசிக்க >>>

தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைய வேண்டியது காலத்தின் கட்டாயம் : வி.எஸ்.சிவகரன்

Saturday, November 16th, 2024 at 10:39 (SLT)

கடந்த எழுபது ஆண்டு கால அரசியல் உரிமைக்கான ஜனநாயக மற்றும் ஆயுதப் போராட்டங்களை எதிர்கொண்ட தமிழினம் பல்வேறு விதமான இழப்புகளையும், நெருக்கடிகளையும், வலிகளையும், வாழ்வியல் சுமைகளையும் எதிர்கொண்டு வருகிறது.

மேலும் வாசிக்க >>>

பொல்லால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை : இரு இளைஞர்கள் கைது

Saturday, November 16th, 2024 at 10:35 (SLT)

புத்தளம், சாலியவெவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் பொல்லால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக சாலியவெவ பொலிஸார் தெரிவித்தனர். இந்த கொலை சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (15) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

மேலும் வாசிக்க >>>

நாடாளுமன்ற ஆசனத்தை கைப்பற்றிய அர்ச்சுனா

Friday, November 15th, 2024 at 10:37 (SLT)

இலங்கையில் ஏற்பட்ட அநுர அலை தென்னிலங்கை அரசியல் மட்டுமன்றி தமிழர் தேசிய கட்டமைப்பை தகர்த்துள்ளது. தற்போது வெளியாகிய நாடாளுமன்ற தேர்தல் பெறுபேறுகளுக்கு அமைய வட மாகாணத்தில் தேசிய மக்கள் சக்தி ஆதிக்கம் செலுத்தியுள்ளது. மூன்று ஆசனங்களை கைப்பற்றி உள்ளது.

மேலும் வாசிக்க >>>

பெரும்வெற்றிகள் கொண்டுவரும் ஆபத்துக்கள் குறித்து ஜனாதிபதி எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் : சாலிய பீரிஸ்

Friday, November 15th, 2024 at 10:31 (SLT)

பெரும்வெற்றிகள் கொண்டு வரும் ஆபத்துக்கள்குறித்து ஜனாதிபதி எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

யாழ். வாக்கெண்ணும் நிலையத்தில் களமிறக்கப்பட்ட கலகத்தடுப்பு பொலிஸார்

Friday, November 15th, 2024 at 10:27 (SLT)

பாராளுமன்றத் தேர்தலின் வாக்குகள் எண்ணும் பணியானது யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கெண்ணும் நிலையத்தில் நடைபெற்று வருகிறது.

மேலும் வாசிக்க >>>

இலங்கை பாராளுமன்ற தேர்தல் 2024 முடிவுகள்

Thursday, November 14th, 2024 at 20:01 (SLT)

இலங்கை பாராளுமன்ற தேர்தல் 2024 முடிவுகள்

https://results.elections.gov.lk


அறுகம்பைக்கான பயணக்கட்டுப்பாட்டை இஸ்ரேலும் தளர்த்தியது

Thursday, November 14th, 2024 at 11:56 (SLT)

இலங்கையின் அறுகம்பை பிரதேசத்திற்குச் செல்வதைத் தவிர்க்குமாறு கூறி இஸ்ரேல் தனது பிரஜைகளுக்குப் பிறப்பித்திருந்த பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது. அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு சபையால் அந்த எச்சரிக்கை அளவை நான்கில் இருந்து இரண்டாக குறைத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் வாசிக்க >>>

வாக்காளர் அட்டை இன்றியும் வாக்களிக்க முடியும்

Thursday, November 14th, 2024 at 11:53 (SLT)

வாக்காளர்கள் காலையலேயே சென்று வாக்களிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. செல்லுபடியாகும் அடையாள அட்டையுடன் நேரத்துடனே வாக்களிப்பு நிலையத்திற்கு சென்று வாக்களிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க அறிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>