36 நீர்த்தேக்கங்கள் தொடர்ந்தும் வான் பாய்கின்றன 

Sunday, December 21st, 2025 at 10:17 (SLT)

நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நிர்வாகத்தின் கீழ் உள்ள 73 பிரதான குளங்களில் 36 நீர்த்தேக்கங்கள் தொடர்ந்தும் வான் பாய்ந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

இந்த அரசாங்கம் இன்னும் கொஞ்ச காலத்திற்கே இருக்கும் என்று மகாநாயக்க தேரர்கள் என்னிடம் கூறினார்கள் : அர்ச்சுனா MP

Saturday, December 20th, 2025 at 10:21 (SLT)

இந்த அரசாங்கம் இன்னும் கொஞ்ச காலத்திற்கே இருக்கும் என்று மகாநாயக்க தேரர்கள் என்னிடம் கூறினார்கள் என யாழ். மாவட்ட சுயேச்சைக்குழு உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

மக்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்காகவே 500 பில்லியன் ரூபா குறைநிரப்பு பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது : ஜனாதிபதி

Saturday, December 20th, 2025 at 10:14 (SLT)

அண்மைய வரலாற்றில் நாங்கள் முன்வைத்த பாரிய தொகை குறைநிரப்பு பிரேரணை இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நீண்ட விவாதத்திற்குப் பிறகு, 05 ஆம் திகதி, 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட ஆவணத்தை இந்த பாராளுமன்றத்தில் நிறைவேற்றினோம். ஆனால் மிகக் குறுகிய காலத்தில், மீண்டும் 500 பில்லியன் ரூபாய்க்கான குறைநிரப்பு பிரேரணையை சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

60 இலட்சம் பெறுமதியான போதைப்பொருள் மீட்பு

Saturday, December 20th, 2025 at 9:51 (SLT)

60 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோயின் போதைப்பொருளுடன் நபரொருவர் பாணந்துறை தெற்கு தலைமையக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

ரணில் விக்கிரமசிங்க பதவி விலகத் தீர்மானித்தால் அது பொறுத்தமான முடிவல்ல : பாராளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா

Saturday, December 20th, 2025 at 9:48 (SLT)

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் இணைவிற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவி விலகத் தீர்மானித்தால் அது பொறுத்தமானதொரு முடிவு அல்ல. ரணில் விக்கிரமசிங்கவின் அனுபவத்தோடு, சஜித் பிரேமாச உட்பட அனைவரும் இணைந்து பயணிக்க வேண்டும் என்பதே ஐக்கிய மக்கள் சக்தியின் பெரும்பாலான உறுப்பினர்களின் நிலைப்பாடாகும் என பாராளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

கொள்ளுப்பிட்டியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபச்சார விடுதி முற்றுகை

Saturday, December 20th, 2025 at 9:42 (SLT)

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் நடத்தப்பட்டுவந்த விபச்சார விடுதி ஒன்று சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை (19) இரவு கொழும்பு தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

மேலும் வாசிக்க >>>

நாட்டில் தற்போது நடப்பது அரசாங்கத்தின் ஜனநாயக நடைமுறையா? அல்லது தேசிய மக்கள் சக்தியின் அராஜகமா? : சிறீதரன்

Friday, December 19th, 2025 at 10:15 (SLT)

நாட்டில் தற்போது நடப்பது அரசாங்கத்தின் ஜனநாயக நடைமுறையா? அல்லது தேசிய மக்கள் சக்தியின் அராஜகமா? , கடந்த ஆட்சியாளர்கள் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தீர்கள். அவர்கள் ஆயுத ரீதியில் எமது மக்களை அராஜகம் மற்றும் இனப்படுகொலைகளை செய்தனர். அதனை மெதுவாக கண்ணுக்கு தெரியாத நூதனமான முறையில் சுற்றறிக்கைகள் மூலம் தேசிய மக்கள் சக்தி இன்னுமொரு மிகப்பெரிய இனப்படுகொலை மற்றும் இனவழிப்பை நாட்டில் செய்வதற்கு முயற்சிக்கின்றது என இலங்கை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

இலங்கைக்கான அவசர நிதி: இன்று கூடுகிறது IMF நிறைவேற்று சபை

Friday, December 19th, 2025 at 10:11 (SLT)

இலங்கை அரசாங்கம் விடுத்துள்ள அவசர நிதி வசதி கோரிக்கை குறித்து பரிசீலிப்பதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிறைவேற்று சபை இன்று (19) கூடவுள்ளது.

மேலும் வாசிக்க >>>

கஜேந்திரகுமார் தலைமையிலான குழு மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு

Friday, December 19th, 2025 at 10:08 (SLT)

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய பேரவையினர் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேற்று சந்தித்து கலந்துரையாடல் நடத்தியுள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

கல்வி கற்குமாறு தாய் வலியுறுத்தியதால் மாணவி விபரீத முடிவு

Friday, December 19th, 2025 at 10:04 (SLT)

யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை பகுதியில் தாயார் கல்வி கற்குமாறு தொடர்ந்து வலியுறுத்தியதால், மனமுடைந்த 15 வயதுடைய மாணவி ஒருவர் உயிர்மாய்த்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் பணி இடைநீக்கம்

Friday, December 19th, 2025 at 10:01 (SLT)

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்‌ஷன் பெல்லனா பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.சுகாதார அமைச்சினால் முன்னெடுக்கப்பட்ட முதற்கட்ட விசாரணைகளை அடுத்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழை

Friday, December 19th, 2025 at 9:59 (SLT)

கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என்பதுடன் சில இடங்களில் சுமார் 75 மி.மீ அளவிலான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவயில் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேலும் வாசிக்க >>>

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய முறையில் நிவாரண உதவிகள் வழங்கப்படவில்லை கவீந்திரன் கோடீஸ்வரன் குற்றச்சாட்டு

Friday, December 19th, 2025 at 9:55 (SLT)

அம்பாறை மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய முறையில் நிவாரண உதவிகள் வழங்கப்படவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையாக நிவாரணம் வழங்கப்படும். அரசாங்கம் இவ்விடயத்தில் விசேட கவனம் செலுத்த வேண்டும் என்று என்று இலங்கை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

வவுனியாவில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த கணவன்

Friday, December 19th, 2025 at 9:49 (SLT)

வவுனியா, ஈச்சங்குளம் – கருவேப்பங்குளம் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் வாசிக்க >>>

நாமலுக்கு எதிரான க்ரிஷ் வழக்கு ஒத்திவைப்பு

Thursday, December 18th, 2025 at 12:02 (SLT)

க்ரிஷ் பரிவர்த்தனை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 16 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் வாசிக்க >>>