ஈரானில் நிலவி வரும் அரசியல் நெருக்கடிகள் மற்றும் மக்கள் போராட்டங்களுக்கு இடையே, அந்நாட்டு அரசு மரணதண்டனை நிறைவேற்றுவதை அதிரடியாக அதிகரித்துள்ளது. நார்வேயைச் சேர்ந்த ‘ஈரான் மனித உரிமைகள்’ (IHR) மற்றும் பாரிஸைச் சேர்ந்த ‘ECPM’ ஆகிய அமைப்புகள் நேற்று (ஏப்ரல் 13, 2026) வெளியிட்ட வருடாந்திர அறிக்கையின்படி, 2025-ஆம் ஆண்டில் மட்டும் ஈரானில் குறைந்தது 1,639 பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இது 2024-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் சுமார் 68 சதவீதம் அதிகமாகும். குறிப்பாக, 1989-ஆம் ஆண்டிற்குப் பிறகு ஈரானில் ஒரே ஆண்டில் இவ்வளவு அதிகமான எண்ணிக்கையில் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்படுவது இதுவே முதல்முறையாகும்.
மேலும் வாசிக்க >>>