கப்பல் போக்குவரத்தை முற்றிலும் நிறுத்தியது அமெரிக்கா ஈரான் துறைமுகங்கள் மீதான முற்றுகை தொடங்கியது: மீண்டும் போர் மூளும் அபாயம்; மத்திய கிழக்கில் கடும் பதற்றம்

Tuesday, April 14th, 2026 at 5:38 (SLT)

ஈரான் துறைமுகத்திற்குள் எந்த கப்பலும் செல்வதையும், வெளியேறுவதையும் தடுக்கும் வகையில் அமெரிக்க கடற்படையின் முற்றுகை நடவடிக்கை திட்டமிட்டபடி நேற்று மாலை தொடங்கியது. இதற்கு பதிலடியாக மத்திய கிழக்கில் உள்ள மற்ற அனைத்து துறைமுகங்கள் குறிவைக்கப்படும் என ஈரான் மிரட்டி உள்ளது. இதனால் மேற்கு ஆசியாவில் மீண்டும் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கடந்த பிப்ரவரி 28ம் தேதி போர் தொடுத்த நிலையில், 40 நாள் சண்டைக்குப் பிறகு கடந்த 8ம் தேதி 2 வார தற்காலிக போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட்டது.

மேலும் வாசிக்க >>>

எமது வாசகர்கள் அனைவருக்கும் தமிழ், சிங்கள புத்தாண்டு நல்வாழ்த்துகள் ரெலோ நீயூஸ்

Tuesday, April 14th, 2026 at 0:01 (SLT)

உலக அளவில் இன்றைய தினம் சித்திரைப் புத்தாண்டை கொண்டாடும் எமது அன்பார்ந்த வாசகர்கள் அனைவருக்கும் ரெலோ நீயூஸ் செய்திக் குழுமத்தின் சார்பில் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்…

www.telonews.com


அமெரிக்காவில் முதல்முறையாக விவேகானந்தரின் முழுஉருவ சிலை திறப்பு

Monday, April 13th, 2026 at 7:48 (SLT)

அமெரிக்காவில் முதல் முறையாக சுவாமி விவேகானந்தரின் முழு உருவ சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. சியாட்டில் நகரின் மையப்பகுதியில் நிறுவப்பட்டுள்ள இந்த வெண்கலச் சிலையை, மாநகர மேயர் கேட்டி வில்சன் மற்றும் இந்தியத் துணைத் தூதர் பிரகாஷ் குப்தா ஆகியோர் திறந்து வைத்தனர்.

மேலும் வாசிக்க >>>

நெதன்யாகு உருவபொம்மை எரிப்பு: யூத எதிர்ப்பு என இஸ்ரேல் கடும் கண்டனம்

Monday, April 13th, 2026 at 5:34 (SLT)

ஸ்பெயினின் ஆல்பெல்டா டி இரெகுவா கிராமத்தில் ஆண்டுதோறும் ஈஸ்டர் ஞாயிறு அன்று “யூதாஸ் எரிப்பு” என்ற பாரம்பரிய விழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு நடைபெற்ற விழாவில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை ஒத்த உருவபொம்மை ஒன்று ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டு, பின்னர் துப்பாக்கியால் சுடப்பட்டு வெடிபொருட்களால் தகர்க்கப்பட்டது. இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து, இது ஒரு திட்டமிட்ட “யூத எதிர்ப்பு” செயல் என இஸ்ரேல் மற்றும் பல்வேறு யூத அமைப்புகள் ஸ்பெயின் அரசுக்குத் தங்களின் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளன.

மேலும் வாசிக்க >>>

போர் பதற்றங்களுக்கு மத்தியில் சவூதிக்கு 18 போர் விமானங்களை அனுப்பியது பாகிஸ்தான் : 13,000 ராணுவ வீரர்களும் பயணம்

Monday, April 13th, 2026 at 5:27 (SLT)

மண்டல பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பாகிஸ்தான் நாட்டு போர் விமானங்கள் மற்றும் ராணுவ வீரர்கள் சவூதி அரேபியாவிற்கு அதிரடியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் மற்றும் சவூதி அரேபியா இடையே கடந்த 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் முக்கிய தற்காப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. ஒரு நாட்டின் மீது நடத்தப்படும் தாக்குதலை இரு நாடுகளுக்குமான தாக்குதலாக கருதி எதிர்கொள்ள வேண்டும் என்பதே இந்த ஒப்பந்தத்தின் முக்கிய சாரம்சமாகும். முன்னதாக, பாகிஸ்தானின் பொருளாதார நெருக்கடிக்கு உதவும் வகையில் சவூதி அரேபிய நிதி அமைச்சர் முகமது அல் ஜடான் இஸ்லாமாபாத் வந்து பல்வேறு நிதியுதவிகளை அறிவித்திருந்தார்.

மேலும் வாசிக்க >>>

கின்னஸ் சாதனை படைத்த பாடகி ஆஷா போஸ்லே மாரடைப்பால் காலமானார்

Monday, April 13th, 2026 at 5:19 (SLT)

இந்திய திரையுலகில் தமிழ் உள்பட 20 மொழிகளில் 12,500 பாடல்களுக்கு மேல் பாடியிருக்கும் சீனியர் பாடகி ஆஷா போஸ்லே, நேற்று மும்பை மருத்துவமனையில் தனது 92வது வயதில் காலமானார். கடந்த சில மாதங்களாக நுரையீரல் பாதிப்பு, இதயம் தொடர்பான பிரச்னைகளால் ஆஷா போஸ்லே கடுமையாக போராடி வந்தார். நேற்று முன்தினம் அவருக்கு திடீரென்று ஏற்பட்ட மூச்சுத்திணறல் மற்றும் மாரடைப்பு காரணமாக, மும்பை பிரீச்கேண்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று ஆஷா போஸ்லே மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரது இறுதிச்சடங்கு இன்று மாலை 4 மணியளவில், மும்பை சிவாஜி பூங்காவில் நடக்கிறது என்று, ஆஷா போஸ்லே மகன் ஆனந்த் போஸ்லே தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

நைஜீரிய விமானப்படை தாக்குதல்: 100 பேர் பலி

Monday, April 13th, 2026 at 5:11 (SLT)

வடகிழக்கு நைஜீரியாவில் உள்ள போர்னோ மாநிலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஜிஹாதி கிளர்ச்சியாளர்களின் ஆதிக்கம் உள்ளது. அங்கு வாழும் மக்கள் மீது இவர்கள் அடக்குமுறைகளை ஏவுவதாக கூறப்படுகிறது. இதனால், ஜிஹாதிகள் மீது அந்த நாட்டு விமானப்படை அடிக்கடி தாக்குதலை நடத்தி வருகிறது.

மேலும் வாசிக்க >>>

ஈரான் உடனான 21 மணி நேர பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை: அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ்

Sunday, April 12th, 2026 at 13:58 (SLT)

 ஈரான் உடனான 21 மணி நேர பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை என்று அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் பேட்டி அளித்துள்ளார். அமெரிக்கா – ஈரான் இடையேயான போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை பாகிஸ்தானில் விடிய விடிய நடைபெற்றது. அமெரிக்காவின் அம்சங்களை ஈரான் ஏற்கவில்லை. இரு நாடுகள் இடையே எந்த ஒப்பந்தமும் கையெழுத்தாகமலேயே அமெரிக்கா திரும்புகிறோம்

மேலும் வாசிக்க >>>

பழம்பெரும் இந்தி பாடகி ஆஷா போஸ்லே உடல்நலக் குறைவால் காலமானார்

Sunday, April 12th, 2026 at 13:55 (SLT)

பழம்பெரும் இந்தி பாடகி ஆஷா போஸ்லே (92) உடல்நலக் குறைவால் காலமானார். சுமார் 12,000 திரைப்பாடல்களை பாடியுள்ள பிரபல பின்னணி பாடகி ஆஷோ போஸ்லே (92) காலமானார். சுமார் 12,000 திரைப்பாடல்களை பாடியுள்ள பிரபல பின்னணி பாடகி ஆஷோ போஸ்லே மாரடைப்பு காரணமாக மும்பை தனியார் மருத்துவமனையில் கிசிச்சை பெற்ற நிலையில் உயிரிழந்தார்

மேலும் வாசிக்க >>>

லொறி பாலத்திலிருந்து வீழ்ந்து விபத்து: இருவர் சம்பவ இடத்திலேயே பலி

Sunday, April 12th, 2026 at 13:50 (SLT)

வாரியப்பொல – நாரம்மல வீதியின் நெலும்புவ, கொலமுணுஓயா பாலத்திலிருந்து லொறி ஒன்று கவிழ்ந்ததில், அதன் சாரதி மற்றும் உதவியாளர் ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இன்று அதிகாலை 1.00 மணி முதல் 2.00 மணிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக கட்டுப்பொத்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

ஈரானிய படையினரை மீண்டும் தாயகம் அனுப்ப தீர்மானிக்கப்பட வில்லை : வெளிவிவகார அமைச்சு

Sunday, April 12th, 2026 at 13:47 (SLT)

இலங்கைக் கடற்பரப்பில் அண்மையில் இடம்பெற்ற ஈரானிய கப்பல் மீதான தாக்குதல் மற்றும் இலங்கையில் ஈரானியப் படையினரின் இருப்பு குறித்த விவாதங்கள் தற்போது சர்வதேச மட்டத்தில் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், இலங்கையில் தங்கவைக்கப்பட்டுள்ள ஈரானிய படையினரை மீண்டும் தாயகம் அனுப்புவது குறித்து தீர்மானிக்கப்பட வில்லை என வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.

மேலும் வாசிக்க >>>

புறக்கோட்டை மத்திய பஸ் நிலையத்தை சேதப்படுத்தியவர் கைது

Sunday, April 12th, 2026 at 13:45 (SLT)

சமீபத்தில் புதுப்பிக்கப்பட்ட புறக்கோட்டை மத்திய பஸ் நிலையத்தில் ஏற்பட்ட சொத்து சேதம் தொடர்பாக ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.2026 ஏப்ரல் 8 ஆம் தேதி புதுப்பித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்ட இந்த பஸ் நிலையத்தில், புதிதாக நிறுவப்பட்ட பல வசதிகள் சேதமடைந்ததைத் தொடர்ந்து நலன்புரி பிரிவு புறக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்தது.

மேலும் வாசிக்க >>>

நடுரோட்டில் அரிவாள் வேட்டை: pலிவர்பூல் நகரில் பொதுமக்கள் முன்னிலையில் கொடூரமாக மோதிக்கொண்ட கும்பல்

Saturday, April 11th, 2026 at 10:29 (SLT)

லிவர்பூல் நகரின் பரபரப்பான சாவாஸ் பார்க் (Chavasse Park) பகுதியில், கடந்த திங்கட்கிழமை மாலை 7:15 மணியளவில் கருப்பு நிற ஹூடட் (Hooded) ஜாக்கெட் அணிந்த இளைஞர் கும்பல் ஒன்று திடீரென ஒரு இளைஞரைச் சூழ்ந்து கொண்டு சரமாரியாகத் தாக்கத் தொடங்கியது. இந்த மோதலின் போது, கும்பலில் இருந்த சிலர் மறைத்து வைத்திருந்த நீண்ட அரிவாள்களை எடுத்து அந்த இளைஞரை வெட்ட முயன்றனர். அங்கிருந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் இதைக் கண்டு அலறியடித்துக் கொண்டு நாலாபுறமும் சிதறி ஓடினர். இந்தத் தாக்குதல் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி காண்போரை அதிர வைத்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

அமெரிக்காவுடன் விளையாடாதீர்கள்: ஈரானுக்கு துணை அதிபர் வான்ஸ் எச்சரிக்கை

Saturday, April 11th, 2026 at 10:25 (SLT)

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான முக்கியத்துவம் வாய்ந்த அமைதி பேச்சுவார்த்தை பாகிஸ்தானில் நடைபெற இருந்த நிலையில் லெபனான் மீது இஸ்ரேல் தீவிர தாக்குதல் நடத்துவதால் அமைதி பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. இஸ்ரேலை அமெரிக்கா கட்டுப்படுத்தாவிட்டால் பேச்சுவார்த்தையில் இருந்து விலகப்போவதாக ஈரான் அறிவித்தது. இதையடுத்து அமெரிக்காவுடன் ஈரான் விளையாட வேண்டாம் என்று அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் எச்சரித்தார்.

மேலும் வாசிக்க >>>

எப்ஸ்டீனின் குற்றங்கள் குறித்து எனக்குத் தெரியாது: அதிபர் டிரம்பின் மனைவி மெலனியா மறுப்பு

Saturday, April 11th, 2026 at 10:21 (SLT)

அமெரிக்காவில் பாலியல் குற்றவாளியான ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. இதில் அதிபர் டிரம்ப், முன்னாள் அதிபர் கிளிண்டன் உட்பட பல பிரபலங்களின் பெயர்கள் இடம்பெற்று இருந்தன. இது பயங்கர சர்ச்சைகளையும் விவாதங்களையும் ஏற்படுத்தியது. இந்நிலையில் அமெரிக்க முதல் பெண்மணியான அதிபர் டிரம்பின் மனைவி மெலனியா டிரம்பிற்கும் எப்ஸ்டீனுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் வாசிக்க >>>