பொலிஸாரின் சுற்றிவளைப்பில் மான் இறைச்சி, துப்பாக்கியுடன் இருவர் கைது

Saturday, December 13th, 2025 at 11:03 (SLT)

மான் இறைச்சி, வேட்டைக்கு பயன்படுத்திய துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் வைத்திருந்த இரு சந்தேக நபர்களை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் மான் இறைச்சி உட்பட வேன் மோட்டார் சைக்கிள் என்பன கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளன.

மேலும் வாசிக்க >>>

பேஸ்புக் விருந்து; 26 பேர் போதைப்பொருட்களுடன் கைது

Saturday, December 13th, 2025 at 10:45 (SLT)

தெல்தெனிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு அருகிலுள்ள ஹோட்டல் ஒன்றில் நடத்தப்பட்ட ‘பேஸ்புக் விருந்து’ ஒன்றைச் சுற்றிவளைத்த பொலிஸார், போதைப்பொருட்களுடன் 22 இளைஞர்களையும் 4 யுவதிகளையும் கைது செய்துள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

அமெரிக்கத் தூதுவர் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் இடையில் சந்திப்பு

Saturday, December 13th, 2025 at 10:41 (SLT)

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் மற்றும் விஞ்ஞானம், தொழில்நுட்பம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பேராசிரியர் கோமிக உடுகமசூரிய ஆகியோருக்கிடையிலான சந்திப்பு ஒன்று கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் அண்மையில் இடம்பெற்றது.

மேலும் வாசிக்க >>>

4 மாவட்டங்களுக்கு தொடர்ந்தும் மண்சரிவு அபாய எச்சரிக்கை

Saturday, December 13th, 2025 at 10:38 (SLT)

நிலவும் மழையுடனான வானிலையால் பதுளை மாவட்டத்தில் மண்சரிவு அபாயமிக்க பகுதிகளிலுள்ள சுமார் 600-இற்கும் அதிகமானோர் பாதுகாப்பு இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் பிரபாத் அபேவிக்ரம தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

இலங்கை மீண்டெழ ஆஸ்திரேலியா துணை நிற்கும்: பிரதமரிடம் உறுதியளிப்பு

Saturday, December 13th, 2025 at 10:35 (SLT)

பேரிடரால் ஏற்பட்ட நெருக்கடியான நிலையில் இருந்து இலங்கை மீண்டெழுவதற்கு ஆஸ்திரேலியா துணை நிற்கும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் குடியுரிமை, ஒழுக்கநெறி மற்றும் பல்கலாசார அலுவல்கள் மற்றும் சர்வதேச கல்விக்கான துணை அமைச்சர் ஜூலியன் ஹில் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்தார்.

மேலும் வாசிக்க >>>

வெளிநாட்டு பணவனுப்பல் அதிகரிப்பு

Saturday, December 13th, 2025 at 10:32 (SLT)

இலங்கைக்குக் கிடைத்த வெளிநாட்டுப் பணயனுப்பல் கடந்த நவம்பர் மாதத்தில் 673.4 மில்லியன் அமெரிக்க டொலராகப் பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. 

மேலும் வாசிக்க >>>

இலங்கையில் 6 பேரில் ஒருவர் வறுமையில்

Saturday, December 13th, 2025 at 10:30 (SLT)

“இலங்கையில் 6 பேரில் ஒருவர் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அவர்களை நாம் மீட்டெடுக்க வேண்டும். வறுமையான மக்களைக் கொண்ட நாடாகத் தொடர்ந்து இந்த நாட்டை முன்னெடுத்துச் செல்ல முடியாது” என தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

பாராளுமன்றம் எதிர்வரும் 18 ஆம் திகதி கூடுகிறது : சபாநாயகர் அறிவிப்பு

Saturday, December 13th, 2025 at 10:27 (SLT)

எதிர்வரும் டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு ஶ்ரீலங்கா ஜனநாயக சோசலிச குடியரசின் பாராளுமன்ற அமர்வு நடைபெறும் என சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன அறிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

நுவரெலியா வீதிகளில் இரவு நேரப் பயணத்தைத் தவிர்க்கவும் : துஷாரி தென்னகோன்

Friday, December 12th, 2025 at 11:14 (SLT)

நுவரெலியாவுக்குள் பிரவேசிக்கும் எந்தவொரு வீதியிலும் இரவு வேளையில் வாகனங்களைச் செலுத்த வேண்டாம் என நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன் சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

ஜப்பானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

Friday, December 12th, 2025 at 11:10 (SLT)

ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் இன்று (12) காலை ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. 

மேலும் வாசிக்க >>>

யாழில் 3 வயது குழந்தை சித்திரவதை

Friday, December 12th, 2025 at 11:07 (SLT)

யாழ்ப்பாணம், பொன்னாலை பகுதியில் மூன்று வயதுக் குழந்தையை அடித்துக் காயப்படுத்தி, அக்காயங்களில் மிளகாய்த்தூள் பூசி சித்திரவதை செய்த அதிர்ச்சியூட்டும் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

மேலும் வாசிக்க >>>

இந்திய இழுவைப் படகுகளைத் தடுக்கக் கோரி யாழில் மீனவர்கள் பாரிய போராட்டம்

Friday, December 12th, 2025 at 11:04 (SLT)

எல்லை தாண்டி வரும் இந்திய மீனவர்களின் சட்டவிரோத இழுவைப் படகுகளைத் தடுத்து நிறுத்துமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தி யாழ் மாவட்ட கடற்றொழிலாளர்கள் இன்று யாழ்ப்பாணத்தில் உள்ள கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் முன்பாகப் பாரிய போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

மேலும் வாசிக்க >>>

டெலிகிராம் ஊடாக பண மோசடி செய்தவர் கைது

Friday, December 12th, 2025 at 11:01 (SLT)

இணையத்தளம் ஊடாக பண மோசடி செய்த சந்தேகநபர் ஒருவரை கணினி குற்ற விசாரணைப் பிரிவின் வடமேல் மாகாண உப பிரிவு கைது செய்துள்ளது. 

மேலும் வாசிக்க >>>

கொலை செய்ய திட்டம் தீட்டிய ஐவர் கைது

Thursday, December 11th, 2025 at 10:06 (SLT)

மனிதப் படுகொலை ஒன்றுக்கு சதித் திட்டம் தீட்டிய சந்தேக நபர்கள் 5 பேரை மேல் மாகாண தெற்கு பிராந்திய குற்றப் பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 6ஆம் திகதி தெஹிவளை – வனரத்ன வீதிப் பகுதியில் உள்ள விளையாட்டு மைதானம் அருகே துப்பாக்கியால் சுட்டு ஒருவரைக் கொலை செய்து மற்றுமொருவருக்கு பலத்த காயங்களை ஏற்படுத்திய குற்றத்திற்கு பழிவாங்கும் வகையில், தெஹிவளை பகுதியிலேயே இந்தக் கொலைத் திட்டம் தீட்டப்பட்டதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

மேலும் வாசிக்க >>>

கட்டுநாயக்க அதிவேக வீதியில் குப்பை பையை வீசிய யாழ்ப்பாண சாரதி

Thursday, December 11th, 2025 at 10:03 (SLT)

கட்டுநாயக்க அதிவேக வீதியில் குப்பைப் பையை வீசிய யாழ்ப்பாணத்தை சேர்ந்த 35 வயது வான் சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று(10) மதியம் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>