இன்றும் மழையுடனான வானிலை

Wednesday, August 13th, 2025 at 6:24 (SLT)

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையுடனான வானிலை நிலவக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேலும் வாசிக்க >>>

தேசிய பொலிஸ் ஆணைக்குழு உறுப்பினர் பதவியிலிருந்து ரேணுகா ஏக்கநாயக்க இராஜினாமா

Tuesday, August 12th, 2025 at 10:35 (SLT)

தேசிய பொலிஸ் ஆணைக்குழு உறுப்பினர் பதவியிலிருந்து ரேணுகா ஏக்கநாயக்க இராஜினாமா செய்துள்ளார்.ரேணுகா ஏக்கநாயக்க முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவின் மனைவி ஆவார்.

மேலும் வாசிக்க >>>

சுமார் 11 ரூபாய் கோடிக்கும் அதிக மதிப்புள்ள தங்க பிஸ்கட்களுடன் ஒருவர் கைது

Tuesday, August 12th, 2025 at 10:31 (SLT)

சுமார் 11 ரூபாய் கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள தங்க பிஸ்கட்களுடன் ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது 1 கிலோ 2.66 கிராம் தங்க பிஸ்கட்டுகள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் வாசிக்க >>>

ரயில்வே பொது மேலாளரை பதவி நீக்க அமைச்சரவை அனுமதி

Tuesday, August 12th, 2025 at 10:28 (SLT)

ரயில்வே பொது மேலாளர் தம்மிக்க ஜயசுந்தரவை அந்தப் பதவியில் இருந்து நீக்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

படகு கவிழ்ந்து விபத்து தந்தையும், மகனும் உயிரிழப்பு

Tuesday, August 12th, 2025 at 10:24 (SLT)

பொலன்னறுவை பராக்கிரம சமுத்திரத்தில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் தந்தையும் மகனும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் வாசிக்க >>>

வரிச்சலுகை ஒப்பந்தத்தை 90 நாட்கள் நீடித்த அமெரிக்கா, சீனா

Tuesday, August 12th, 2025 at 10:20 (SLT)

அமெரிக்காவும் சீனாவும் தங்கள் வர்த்தகப் போர் நிறுத்தத்தை எதிர்வரும் நவம்பர் 10 ஆம் திகதி வரை நீட்டித்துள்ளன.வரி அதிகரிப்பு அமுலுக்கு வருவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு இந்த அறிவிப்பு வந்தது.

மேலும் வாசிக்க >>>

யாழில். திடீரென பெய்த கடும் மழை : 32 பேர் பாதிப்பு

Tuesday, August 12th, 2025 at 7:18 (SLT)

யாழ்ப்பாணத்தில் திங்கட்கிழமை (11) காலை திடீரென பெய்த கடும் மழை காரணமாக 7 குடும்பங்களைச் சேர்ந்த 32பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

மின்னேரியாவில் வாகன விபத்து: 26 பேர் காயம்

Tuesday, August 12th, 2025 at 7:13 (SLT)

கொழும்பு-மட்டக்களப்பு பிரதான வீதியில், மின்னேரியாவின் பட்டுஓய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 26 பேர் காயமடைந்துள்ளனர். மாதுரு ஓயாவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பேருந்து, இன்று (12) அதிகாலை 3 மணியளவில் முன்னால் சென்ற டிப்பர் லொரியுடன் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக மின்னேரியா பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் வாசிக்க >>>

பெறுமதியான திமிங்கல வாந்தி வைத்திருந்தவர் கைது

Monday, August 11th, 2025 at 13:52 (SLT)

பெரும் தொகை பெறுமதியான அம்பர் தொகையை (திமிங்கல வாந்தி) வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் திவுலபிட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். திவுலபிட்டிய பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், திவுலபிட்டிய – நீர்கொழும்பு வீதியில் உள்ள போமுகம்மன பகுதியில் நேற்று (10) முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த கைது இடம்பெற்றுள்ளது.

மேலும் வாசிக்க >>>

நான்கு எம்.பி.க்கள் பயணம் அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்

Monday, August 11th, 2025 at 13:50 (SLT)

கேரளா – திருவனந்தபுரத்தில் இருந்து நேற்று (10) இரவு டெல்லிக்கு சென்ற ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சென்னைக்கு திருப்பி விடப்பட்டது. குறித்த விமானம் சென்னையில் பாதுகாப்பாக தரையிறங்கியதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. விமானத்தில் நான்கு கேரள எம்.பி.க்கள் பயணம் செய்ததாக கூறப்படுகின்றது.

மேலும் வாசிக்க >>>

கனடாவில் ஆபத்தான நபராக பெயரிடப்பட்ட தமிழ் இளைஞன் : பொலிசார் அவசர அறிவிப்பு

Monday, August 11th, 2025 at 13:46 (SLT)

கனடாவில் ஆபத்தான நபராக பெயரிடப்பட்டுள்ள தமிழ் இளைஞன் ஒருவர் தேடப்பட்டு வருவதாக பீல் (Peel) பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆபத்தான நபராக ரொரன்ரோவை சேர்ந்த 36 வயதான பிரதீபன் நாகராஜா என்பவரே தேடப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

யாழில் இடம்பெற்ற கத்தி குத்தில் ஒருவர் பலி

Monday, August 11th, 2025 at 13:01 (SLT)

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கத்திக்குத்தில் ஒருவர் உயிரிழந்தார். புங்குடுதீவு முதலாம் வட்டாரத்தை சேர்ந்த 46 வயதான நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் வாசிக்க >>>

வௌிநாட்டு பெண்ணொருவர் கடலில் மூழ்கி பலி

Monday, August 11th, 2025 at 12:58 (SLT)

அளுத்கம மொரகல்ல கடற்கரையில் நீராடச் சென்ற வெளிநாட்டுப் பெண் ஒருவர் இன்று (11) நீரில் மூழ்கி உயிரிழந்தார். இறந்தவர் 48 வயதான வியட்நாமை சேர்ந்த பெண் என தெரியவந்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

துருக்கியில் 6.1 ரிச்டர் அளவில் பூகம்பம் : ஒருவர் உயிரிழப்பு 

Monday, August 11th, 2025 at 12:53 (SLT)

துருக்கியில் 6.1 ரிச்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டதை அடுத்து ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, பலர் காயமடைந்துள்ளனர். இஸ்தான்புல் மற்றும் சுற்றுலா தலமான இஸ்மிர் உட்பட துருக்கியின் மேற்கு பகுதியில் உள்ள பல நகரங்களில் பூகம்பம் உணரப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கின்றது அவுஸ்திரேலியா : ஹமாஸ் நிர்வாகத்தில் பங்கேற்ககூடாது என நிபந்தனை

Monday, August 11th, 2025 at 12:47 (SLT)

ஹமாஸ் அமைப்பு பாலஸ்தீன அரசின் நிர்வாகத்தில் பங்கேற்ககூடாது என்ற நிபந்தனையுடன் ஐக்கியநாடுகள் பொதுச்சபையின் எதிர்கால அமர்வில் பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கவுள்ளதாக அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>