மர்ம விமானம் பற்றி கஸ்பர் அடிகளார் எழுதியுள்ள புது கப்ஸா

December 22nd, 2009 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

சமீபத்தில் தாய்லாந்தில் தரையிறக்கப்பட்ட விமானம் பற்றி பல சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், அதனை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி ஒரு கதையை எழுதித் தள்ளியுள்ளார் திரு ஜெகத் கஸ்பர். அந்த விமானத்தில் ஆர்.பி.ஜி, விமான எதிர்ப்பு ஏவுகணை, மற்றும் துப்பாக்கிகள் இருந்ததாக தாய்லாந்து அதிகாரிகள் பட்டியலிட்டுச் சொல்லிவிட்டனர், ஆனால் அதில் கடுமையான நச்சு வாயு அடங்கிய ஆயுதங்கள் இருந்ததாகவும், அது இலங்கைக்கு கொண்டு செல்லப்பட இருந்ததாகவும் கஸ்பர் அவர்கள் ஒரு கப்ஸா விட்டிருக்கிறார், நக்கீரனில். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

‘வட்டுக்கோட்டைத் தீர்மானம்’ மீதான மீள்வாக்கெடுப்பு என்பது கொட்டைப் பாக்கு அளவுக்குக் கூட பெறுமதி அற்றது: புதினப்பார்வை

December 19th, 2009 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

இலங்கைத் தமிழ்ச் சமூகம் முன்னெப்போதும் இல்லாத வகையில் இப்போது குழப்பத்தில் சிக்கித் தவிக்கின்றது.

இந்தக் குழப்பத்தின் உச்சமாக இப்போது தேர்தல்கள் விளங்குகின்றன.

சிறிலங்காவுக்கான அரச அதிபர் தேர்தலில் தமிழர்கள் என்ன செய்வது என்ற சிக்கலை இப்போதைக்கு ஒர் ஓரத்தில் வைத்துவிடுவோம்.

இலங்கைத் தீவி்ற்கு வெளியே – நாடு நாடாக – இப்போது ‘வட்டுக்கோட்டைத் தீ்ர்மானம்’ மீதான மீள் வாக்குப் பதிவு ஆரவாரத்துடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

தமிழ் பேசும் மக்களின் பொது வேட்பாளர்: செல்வராஜா தனபாலசிங்கம்

December 15th, 2009 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தயக்கங்களும், இலட்சியத்தை கைவிடாத தமிழ் பேசும் மக்களின் நீண்ட வரலாறும்!

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பேசும் மக்கள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்துவதில்லை என்ற முடிவுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வந்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்த வண்ணமுள்ளன. இது உண்மையாயின் இம்முடிவினைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்பதே பல்வேறு தரப்பிலும் காணப்படும் விருப்பமாய் உள்ளது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

யாரை யார் ஏமாற்றுவது?

December 13th, 2009 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

எதிரணிக் கட்சிகள் ஒற்றைவரிக் கொள்கையுடன் பொது வேட்பாளரை நிறுத்தியிருக்கின்றன. நிறைவேற்று ஜனாதிபதி முறையை நீக்க வேண்டும் என்பதே அக்கொள்கை.

நிறைவேற்று ஜனாதிபதி முறை சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பானது என்ற அபிப்பிராயம் அந்த நாளிலிருந்து தெரிவிக்கப்படுகிறது. இப்போதும் சிறுபான்மை சமூகங்களின் தலைவர்கள் இக்கருத்தைக் கூறுகின்றார்கள். இது நியாயமானதாகவே தெரிகின்றது. ஜனாதிபதித் தேர்தலில் நாடு முழுவதும் ஒரே தொகுதியாக இருப்பதால் சிறுபான்மையினர் முக்கியத்துவம் பெறுகின்றனர். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

தேர்தலைப் புறக்கணித்தல் என்னும் மந்திரச்சொல்

December 11th, 2009 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

தேர்தலைப் புறக்கணித்தல் என்னும் மந்திரச்சொல் பொருத்தமானதா?

ஈழத் தமிழர் அரசியலில் தேர்தல் புறக்கணிப்பு என்பது ஒரு மந்திரக் கோல் போல பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

புறக்கணிப்பு, சத்தியாக்கிரகம், உண்ணாவிரதம், சட்டமறுப்பு, கதவடைப்பு போன்ற போராட்ட முறைகள் இந்திய தேசிய விடுதலைப் போராட்டத்தில் இருந்து பெறப்பட்ட அம்சங்களாகும்.

சிறிய அளவிலான அந்நிய வெள்ளையின ஆட்சியாளருக்கு எதிராக, பிரமாண்டமான இந்திய மக்களின் இப்போராட்ட வழிமுறைகள் பல வெற்றியளித்தன. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

ஜனாதிபதித் தேர்தலில் வெளிநாட்டுக் கரங்கள்

December 9th, 2009 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

ஜனாதிபதித் தேர்தலில் வெளிநாட்டு சக்திகளின் கை இருப்பதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை நிராகரிக்க முடியாது. தற்போதைய ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ஷ பதவி யேற்ற நாளிலிருந்து இலங்கையின் நலனுக்கு முரணான வகையில் சில வெளிநாடுகள் செயற்பட்டு வந்ததொன்றும் புதிய விடயமல்ல. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

ஈழ‌த் தமிழர்களின் யூதக் கனவு: யதீந்திரா

December 4th, 2009 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

தான் எதிர்கொள்ளும் நெருக்குவாரங்களில் இருந்து எந்தவொரு சமூகம் தன்னை பாதுகாத்துக் கொள்கின்றதோ அதுதான் சிறந்த பண்பாடுள்ள சமூகம். 

                                  – வரலாற்றியலாளர் டாயன்பீ

சில விடயங்களை வெளிப்படையாகப் பேசித்தான் ஆக வேண்டும். தொடர்ந்தும் வெளிப்படையற்று உள்ளுக்குள் நாமே நம்மை ரசித்தும் புகழ்ந்தும் கொண்டிருக்கும் ஒருவகை தன்மோக எழுத்துக்களிலிருந்து நாம் வெளிவர வேண்டியிருக்கிறது. இவ்வாறு நான் குறிப்பிடுவது சிலருக்கு அதிருப்தியை கொடுக்கக் கூடும். ஆனால் நாம் ஒன்றைப் பற்றி பேசாது விட்டுவிடுவதால் மட்டுமே அந்த ஒன்று என்றைக்குமான உண்மையாகி விடுவதில்லை. இன்று எல்லாமும் முடிந்துவிட்டதே இனி என்ன எழுத்தும் இலக்கியமும் என்ற அங்காலாய்ப்புக்கள்தான் எங்கும் விரவிநிற்கின்றன. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

தேர்தல் வாக்குறுதிகளை சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்

December 2nd, 2009 admin Posted in இணையத்தள கட்டுரை Comments Off on தேர்தல் வாக்குறுதிகளை சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்

தேர்தல் காலத்தில் வேட்பாளர்கள் எவ்வித தயக்கமும் இல்லாமல் வாக்குறுதிகளை அள்ளிக் கொட்டுவார்கள். இது வழமையாக நடக்கின்ற விடயம்.

நடக்கவுள்ள ஜனாதிபதித் தேர்தலிலும் இதை எதிர்பார்க்கலாம். வெற்றிவாய்ப்புள்ளவர்கள் எனக் கருதப்படும் வேட்பாளர்கள் மாத்திரமன்றி, கட்டுப் பணத்தைப் பெற முடியாத வேட்பாளர்களும் தாராளமாக வாக்குறுதிகளை வழங்குவார்கள். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

இது பரிசோதனைக்குரிய நேரமல்ல

November 29th, 2009 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளரொருவரை நிறுத்துவது பற்றித் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆலோசிப்பதாகச் செய்தி வெளியாகியிருக்கின்றது. கூட்டமைப்பின் சில முக்கியஸ்தர்களும் இக் கருத்தைத் தெரிவித்திருக்கின்றார்கள்.

இத் தேர்தலில் வேட்பாளரொருவரை நிறுத்துவதன் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதைச் சாதிக்க முயற்சிக்கின்றதென்பது புரியவில்லை. கூட்டமைப்பு நிறுத்தும் வேட்பாளர் வெற்றி பெறுவதற்கான சாத்தியம் இல்லை. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

புத்திமான் பலவான் : நிலாந்தன்

November 28th, 2009 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

ஈழத்தமிழர்கள் இப்பொழுதும் ஒரு தெளிவற்ற காலசந்தியில் தான் நிற்கிறார்கள். விடுதலைப் புலிகள் இயக்கம் வீழ்ச்சி அடைந்து ஏறக்குறைய ஏழு மாதங்கள் ஆன பின்பும் ஈழத்தமிழர்கள் இப்பொழுதும் எதிர்காலத்தைக் குறித்த தெளிவற்ற சித்திரங்களுடன் தடுமாறும் ஒரு ஜனக்கூட்டமாகவே காணப்படுகிறார்கள்.

முப்பத்து எட்டு ஆண்டுகால ஆயுதப்போராட்டம் தமிழர்களை அவர்களுடைய “எதிரிகளிடம்” கையளிப்பதில்தான் முடிந்திருக்கிறது. யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு ஊடக நண்பர் சொன்னார் “போராட்டம் தொடங்கியபோது கோட்டையிலும், பலாலியிலும், ஆனையிறவிலும் நின்ற ராணுவத்தை இப்பொழுது எங்கள் வீட்டு முற்றத்திலும் கோடியிலும் கொண்டு வந்து நிறுத்திவிட்டு அவர்கள் போய்விட்டார்கள்” என்று. இனி ஒரு ஆயுதப் போராட்டத்தைப் பற்றி கற்பனையே செய்ய முடியாத அளவுக்கு நொந்து நூலாகிப் போய் விட்டார்கள் வன்னி மக்கள். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

இனப் பிரச்சினையின் தீர்வுக்கு இன்னொரு சந்தர்ப்பம்

November 28th, 2009 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

ஒவ்வொரு தேர்தல் காலத்திலும் இனப் பிரச்சினை பற்றிய பேச்சு எழுவது வழமை. நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் இதற்கு விதிவிலக்கல்ல. ஒவ்வொரு தேர்தலின் போதும் பேச்சு எழுந்தபோதிலும் இனப் பிரச்சினைக்கு இன்று வரை தீர்வு கிடைக்க வில்லை. இனப்பிரச்சினையின் தீர்வுக்காக அறுபது வருடங்களுக்கு மேலாக நடத்தப்பட்ட ‘போராட்டம்’ எந்தப் பலனையும் அளிக்கவில்லை. சில தலைவர்கள் தங்கள் அரசியல் இருப்புக்காக மாத்திரம் இனப் பிரச்சினையைக் கையாண்டார்களா என்ற சந்தேகத்துக்கு இது இடமளிக்கின்றது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

பின் வாங்குதல் : ராகவன்

November 27th, 2009 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

ஒரு விடுதலைப் போராட்ட அமைப்பின் வெற்றியானது அது எவ்வாறு சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி இராணுவ அரசியல் தந்திரோபாயங்களை வகுத்துக்கொள்கிறது என்பதிலேயும், எவ்வாறு அது தனது நட்பு சக்திகளைத் தன்னுடன் இணைத்து மக்கள் ஆதரவின் மூலம் தனது நோக்கை அடைகின்றதென்பதிலும் தங்கியுள்ளது. அரசியல் இராணுவ உத்திகள், நட்பு சக்திகளை இணைத்துக் கொள்ளல், மக்கள் ஆதரவைத் தொடர்ந்து தக்கவைத்தல், சர்வதேச நிலைகளைப் புரிந்து கொள்ளல் ஆகிய அனைத்தும் ஒரு விடுதலைப் போராட்டத்திலிருந்து பிரிக்க முடியாத முதன்மைக் கூறுகள். இதில் ஒன்று மட்டுமே இருந்தால் போதாது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

இலங்கை வரலாற்றில் திருப்புமுனை `மஹிந்த சிந்தனை`

November 25th, 2009 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

மஹிந்த சிந்தனை என்பது இலங்கை வரலாற்றின் முக்கியமான சந்தர்ப்பத்தில் புகழ்மிக்க திட்டங்களடங்கிய வரலாற்றுப் புகழ்மிக்க ஒரு வரைவாகும். இது ஒரு தேர்தல் உறுதி மாத்திரமன்றி பொதுவாகவே செயல்படுத்த முடியுமான செயலாற்றலுக்குக் கொண்டுவரக் கூடிய ஒரு திட்டமாதலால் இது ஒரு சரித்திரப் பிரசித்தி பெற்ற ஒரு திருப்பமாகவும் உள்ளது. இத்திட்டத்தினை முற்படுத்தும் போது இலங்கைச் சமூகம், பிரிந்து வேறுபட்டு இருந்ததோடு குரோதமனப்பான்மையும் மிக மும்முரமாகவே இருந்தது.

இந்த கோபதாபம் அகற்றப்பட்டு தேசிய ஒற்றுமையை உறுதிப்படுத்தி மனித மனங்களில் பலவந்தமாக புகுத்தப்பட்ட தாழ்வு நிலையை அகற்றி சிறந்த சமூக கட்டமைப்பொன்றை உருவாக்குவதே “வடக்கின் வசந்தமாகும்”. இந்த தேசிய வேலைத் திட்டத்தினூடாக ‘பண்பாட்டு விழுமியங்களை மேம்படுத்துதல், சிசு திரிய,’ போன்றவற்றை தேசிய ரீதியில் அமுல்படுத்தி சமூக மேற்பாட்டிற்கான பல வேலைத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த இலக்கை அடையும் பொருட்டு சமூக அபிவிருத்தி அலுவல்கள் சம்பந்தமான ஆணையாளர் பதவியொன்றையும் நிர்மாணித்துள்ளதோடு கஷ்டப் பிரதேசங்கள் மற்றும் வளம் குன்றிய பகுதிகளும் உள்ளடக்கப்பட்டவாறு செயல்படுவதற்கு அந்த ஆணையாளருக்கு அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

இலங்கை வரலாறு படைக்கிறது

November 21st, 2009 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

இடம்பெயர்ந்த மக்களை மீளக் குடியமர்த்தும் செயற்பாடு அரசியல் அரங்கில் அதிகம் பேசப்படும் விட யமாக இன்றுவரை இருக்கின்றது. அரசாங்கத்துக்கு எதிரான பிரசாரத்தில் எதிரணிக் கட்சிகள் இடம்பெயர்ந்தோர் பிரச்சினைக்கு முக்கியத்துவம் அளிப்பதை அண்மைக் காலமாக அவதானிக்க முடிகின்றது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு `மாற்றாக` இன்னொரு அரசியல் சக்தியை உருவாக்க வேண்டும்: பாரிஸ் ஈழநாடு

November 19th, 2009 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

முள்ளிவாய்க்கால் பேரழிவில் ஈழத் தமிழர்கள் தமது படைபலத்தை மட்டும் இழக்கவில்லை, தமது அரசியல் பலத்தையும் சேர்த்தே இழந்துள்ளார்கள் என்பது தற்போதைய கூட்டமைப்பு உறுப்பினர்களின் கதகளி நடனத்தினால் உணர்த்தப்பட்டு வருகின்றது. விடுதலைப் புலிகளின் இராணுவ பலம் சிதைக்கப்பட்ட பின்னரும் அவர்களால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈழத் தமிழர்களின் அரசியல் போர்க் களத்தை முன் நகர்த்திச் செல்லும் என்றே தமிழர்கள் நம்பியிருந்தனர். அந்த நம்பிக்கை தற்போது சிதைவடைந்தே செல்கின்றது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button