வடக்கு தேர்தல்களில் தமிழ் கட்சிகள், பொதுசன ஐக்கிய முன்னணியுடன் இணைந்து போட்டியிடுவது பயனுள்ளது!

June 5th, 2009 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

யாழ்ப்பாணம் மாநகர சபைக்கும், வவுனியா நகரசபைக்கும் நடைபெறவுள்ள தேர்தலுக்கான, வேட்பு மனுக்கள் தாக்கல் செய்வதற்கான திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த தேர்தலை சிறிது காலத்திற்காவது ஒத்திவைக்கும்படி, வீ.ஆனந்தசங்கரி தலைமையிலான மூன்று கட்சிகள் கொண்ட ஜனநாயக தமிழ் தேசியக்கூட்டணி விடுத்த கோரிக்கையை அரசாங்கம் காதில் போட்டுக்கொண்டதாகத் தெரியவில்லை. எனவே தேர்தல் நடப்பது நிச்சயமாகிவிட்டது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

உள்ளூராட்சித் தேர்தல்கள் மூலம் வடக்கில் ஜனநாயகம் காலூன்றும்

June 4th, 2009 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

யாழ்ப்பாணம் மாநகர சபைக்கும் வவுனியா நகர சபைக்கும் தேர்தல் நடத்துவதென அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானம் ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்துள்ள சகலரினதும் வரவேற்பைப் பெறும் என்பதில் சந்தேகம் இல்லை. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

வானவில் போல் வேற்றுமையில் ஒற்றுமை காணல் வேண்டும்

May 31st, 2009 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

பத்மநாபா ஈபிஆர்எல்எவ் செயலாளர் நாயகம் தி. சிறீதரனுடன் நேர்காணல்

புலிகளுக்கு பின்னரான அரசியல் சூழல் எவ்வாறு அமையும் எனக் கருதுகிறீர்கள்?

கடந்த இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக தமிழ் மக்களின் தலைமைகள் அழிக்கப்பட்டு சிதைக்கப்பட்டு வந்ததாலும் சமூக உணர்வுள்ள பல மனிதர்கள் இல்லாதொழிக்கப்பட்டதாலும் பாரிய தலைமைத்துவ வெற்றிடமொன்று தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டது. புலிகள் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் என்ற கற்பிதம் உருவாக்கப்பட்டது. ஜனநாயக இடைவெளி அடியோடு இல்லாதொழிக்கப்பட்டது. மாறுபட்ட சிந்தனைகள் உயிராபத்தை விளைவிக்கும் விடயமாக இருந்தது. கடந்த இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக தமிழ் மக்கள் மத்தியில் அரசியல் சிந்தனை சுதந்திரம் மறுக்கப்பட்டிருந்தது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

முன்னொரு காலத்தில் யுத்தம் இருந்தது!

May 30th, 2009 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

மகிந்த மாத்தய எங்கள் மரியாதையை ஏற்றுக்கொள்ளுங்கள்

அரசு என்பது ஆச்சிரமம் நடத்திக்கொண்டிருக்கும் அமைப்போ
அல்லது தேர்தல்களை நடத்தி உறுப்பினர்கள் மந்திரிகள் முதன்மந்திரி உள்ளிட்ட பாராளுமன்ற அமைப்புமுறைமூலமாக மக்களால் மக்களுக்காக நடத்தப்படும் அமைப்போ அல்ல என நாம் பட்டுணர்ந்துள்ளோம். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

’இறந்த தலைவனை’ நினைத்து அழுவதற்கு உரிமை தாருங்கள்

May 28th, 2009 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

இருபது வருடங்களுக்கு முன்பாக தாயகத்தின் முதல் இதழை வெளியிடுவதற்காக அச்சிட்டுத் தயார் செய்து விட்டு மறுநாள் வினியோகிக்கும் உத்தேசத்துடன், இரவு வேலைக்கு சென்று நள்ளிரவு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, கனடாவில் இருந்த கூட்டணி பா.உ. ஒருவருக்கு நெருக்கமாக இருந்த ஒருவர் எலிவேட்டரில் கண்ட போது, சக தமிழர் என்பதை உணர்ந்து அமிர்தலிங்கத்தைச் சுட்ட லேட்டஸ்ட் செய்தியைச் சொன்னார். அத்துடன் ‘றோ தான் செய்திருக்கு’ என்ற அரசியல் ஆய்வையும் கூடவே போனஸாக தந்தார். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

பிரபாகரனின் உடலம் அடையாளம் காணப்பட்டது : இராணுவத் தளபதி

May 19th, 2009 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உடலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவத் தளபதி சரத் பொன்சேகா உறுதிப்படுத்தியுள்ளார். அவரது சடலம் மருத்துவ ரீதியாகவும் உறுதிப் படுத்தப்பட்டதாக இராணுவ வட்டாரங்கள் அறிவித்துள்ளன. பிரபாகரனின் உடலம் தேசிய தொலைக்காட்சியில் காட்டப்பட்டதாக பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

‘ஒரு இனம் இன்னொரு இனத்தை தோற்கடித்த வெற்றியல்ல’: ஜனாதிபதி

May 17th, 2009 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

பயங்கரவாதம் துடைத்தெறியப்பட்டிருக்கிறது. 30 ஆண்டுகளின் பின்னர் நாடு முழுவதும் ஒரே கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டிருக்கிறது. புலிகளின் பிடியிலிருந்த சகல பிரதேசங்களும் படையினரால் முற்றாக மீட்டெடுக்கப்பட்டிருக்கின்றன. திருகோணமலை மாவட்டத்திலுள்ள மாவிலாறில் ஆரம்பிக்கப்பட்ட இராணுவத்தினரின் மனிதாபிமான நடவடிக்கை முல்லைத்தீவுடன் வெற்றிகரமாக முடிவ டைந்திருக்கிறது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

நினைவஞ்சலி

May 13th, 2009 admin Posted in இணையத்தள கட்டுரை Comments Off on நினைவஞ்சலி

சட்டத்தரணியும் மனித உரிமைகள் ஆர்வலரும் ஈபிடிபி செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் ஆலோசகருமான செல்வி மகேஸ்வரி வேலாயுதம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்றாகும். தமிழ் பேசும் மக்களுக்கு தன்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் பாரபட்சமின்றி புரிந்த செல்வி மகேஸ்வரி வேலாயுதம் அவர்கள் ஈழத்தின் அழிவு அரசியலின் கோரப்பசிக்கு இரையாகி ஒரு வருடம் கழிந்து விட்டது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

நினைவழியா நெருப்பு நாள்!

May 7th, 2009 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

அந்த நெருப்பு நாள் நேற்றுப்போல் இருக்கிறது.

ஆனாலும் வடுக்கள் நிறைந்த அந்த நாட்கள் இருபத்தி மூன்று ஆண்டுகளை கடந்து இன்னமும் எம் மனங்களில் தீராத் துயரங்களாகவும் வாரலாற்றுத் துரோகத்தின் ஞாபகங்களாகவும் எரிந்து கொண்டிருக்கின்றன.

தமிழ் பேசும் மக்களின் உரிமைப் போராட்டத்தில் தம்மையும் இணைத்துக் கொண்டு தியாக வேள்வியில் இறங்கியிருந்த தேசத்தின் புதல்வர்களாகிய ரெலோ இயக்கப் போராளிகளை தமிழின விரோதப் பாசிசப் புலிகள் தெருத்தெருவாக உயிரோடு தீயிட்டு கொழுத்திய நாட்களை எப்படி மறப்பது? Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

பொறுப்பைத் தட்டிக் கழிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு

May 5th, 2009 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

தமிழ்க் கட்சிகளை ஜனாதிபதி இன்று சந்தித்துப் பேசவுள்ளதாகப் பத்திரிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன. இச்சந்திப்புக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகின்றது. இச் சந்தர்ப்பத்தில் தமிழ்க் கட்சிகள் ஜனாதிபதியைச் சந்தித்துப் பேச வேண்டியது ஒரு அத்தியாவசிய தேவை. சில வாரங்களுக்கு முன் இத்தகைய பேச்சு வார்த்தைக்கு ஜனாதிபதி விடுத்த அழைப்பைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நிராகரித்தமை ஒரு துரதிஷ்டமான நிகழ்வு. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

வெள்ளாமுள்ளி வாய்க்கால் பகுதியில் பிரபாகரனின் பதுங்கு குழியை சுற்றி விசேட தொலைதூர சினைப்பர் படையணிகள்

May 4th, 2009 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

புதுமாத்தளன் பிரதேசத்தில் யுத்த நடவடிக்கைகளற்ற வலயப்பகுதியில் பொதுமக்களை மனிதகேடயங்களாகப் பயன்படுத்தி அங்குள்ள பதுங்குக்குழி நிலையங்களில் மறைந்திருக்கும் புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரனையும் மற்றும் பொட்டு அம்மான் உட்பட உயர்மட்டத் தலைவர்களும் அங்கிருந்து தப்பிப்போக முடியாத வகையில் குறித்த பகுதியைச்சுற்றி தொலைதூரக் குறிவைப்பு நவீன உபகரணங்கள் பொருத்தப்பட்ட விசேட படையணிகள் துப்பாக்கிகளுடன் இரண்டு படையணிகள் நிலைகொண்டுள்ளதாக பாதுகாப்புத்தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன. இவ்வாறு பிரபாகரன் மற்றும் தலைவர்கள் அங்கிருந்து தப்பியோட எத்தனிப்பார்களேயானால் அவர்களை உடனடியாகச் சுற்றி வளைத்து உயிருடன் பிடிப்பதற்கும் அல்லது சுட்டுக்கொல்வதற்கும் தயாரான நிலையிலேயே மேற்படி இரண்டு விசேட அதிரடிப்படை பிரிவினரும் அங்கு சுற்றி வளைத்துள்ளனர். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

அதிகாரத்தின் தோற்றுவாயாக தகவல்துறை விளங்குகிறது

May 3rd, 2009 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

இன்று அனுஷ்டிக்கப்படுகின்ற உலக பத்திரிகை சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்றைய தினம் எமது ஆசிரிய தலையங்கத்தில் இலங்கையில் ஊடக நிறுவனங்களும் ஊடகவியலாளர்களும் எதிர்நோக்குகின்ற அச்சுறுத்தலின் விளைவாக கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்துக்கு எற்பட்டிருக்கின்ற ஆபத்துக் குறித்தும் அந்த ஆபத்தைப் போக்குவதற்கு அரசாங்கம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் குறிப்பிட்டிருந்தோம். அதேவேளை, தகவல்களைக் கையாளுகின்ற விடயத்தில் ஊடகவியலாளர்கள் கடைப்பிடிக்கின்ற அணுகுமுறைகள் குறித்து பரவலான விமர்சனங்கள் செய்யப்பட்டுவருவதால் அந்த விவகாரம் குறித்தும் பொறுப்புணர்ச்சியுடன் சிந்திக்க வேண்டியது அவசியமாகும். அதனால், ஊடகவியலாளர்களுக்கு இருக்க வேண்டிய பொறுப்புணர்வு குறித்து இன்றைய தினம் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ள விரும்புகின்றோம். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

புலிகளின் யுத்த நிறுத்தக் கோரிக்கை `தமிழ்` மக்களின் நலனுக்காகவல்ல

April 28th, 2009 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

புலிகளின் ஒருதலைப்பட்ச யுத்த நிறுத்த கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்திருப்பது பற்றி வெவ்வேறு விமர்சனங்கள் வெளி வருவதற்கு இடமுண்டு. கடந்த சில வாரங்களாக யுத்த நிறுத்தத்தை வலியுறுத்தி வரும் வெளிநாட்டு, உள்நாட்டு சக்திகள் அரசாங்கத்தின் இந்த அறிவிப்பை விமர்சனத்துக்கு உட்படுத்தலாம். சமகால யதார்த்தத்தை விளங்கிக் கொண்டவர்கள் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை ஒருபோதும் விமர்சிக்க மாட்டார்கள். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

`தன்வினை தன்னைச் சுடும் ஓட்டப்பம் வீட்டைச் சுடும்`

April 27th, 2009 Thulasi Posted in இணையத்தள கட்டுரை No Comments »

1986ம் ஆண்டு ஏப்பிரல் 26ம் நாள் புலிகள் ரெலோ மீது ஒரு தலைப்பட்டசமாக ஆயுதத் தாக்குதலை நடத்த ஆரம்பித்தனர். யாழ்ப்பாணத்தில் கிட்டு என்ற கிருஷ்ணகுமார் தலைமையில் இந்திய அரசாங்கத்திற்கு சார்பாக ரெலோ செயற்படுகின்றனர் என்ற குற்றச் சாட்டை முன்னிறுத்தியே தாக்குதலை ஆரம்பித்தனர். ரெலோ இந்திய அரசாங்கத்தின் ஆலோசனைப்படி தம்மை தாக்கி அழிக்க இருந்ததாகவும் தாம் இதனை அறிந்து முந்தி விட்டதாக பொய் பரப்புரையுடன் தாக்குதல் காரணங்களை அவிழ்த்து விட்டனர். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

கோழிக்காலும் விஸ்க்கிப் போத்தலும்

April 26th, 2009 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

இலங்கைத்தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழுகின்ற ஐரோப்பிய கனேடிய நகரங்களில் நடத்தப்பட்ட மனிதச்சங்கிலி, கறுப்புக்கொடி, புலிக்கொடி, உரிமை, உண்ணாவிரத, கவன ஈர்ப்பு போராட்டங்கள் எதுவும் ஏன் வெற்றி பெறவில்லை என்கின்ற கேள்விக்கு இருக்கும் ஒரே பதில்…?

பல்லாயிரம் உயிர்களை இழந்தும், பல்லாயிரம் கோடி சொத்துக்களை இழந்தும், பலலட்சம் பேர் புலம் யெர்ந்தும் தமிழீழ விடுதலைப் போராட்டம் ஏன் தோற்றுப்போனது என்கின்ற கேள்விக்கும் ஒரே பதில்..? Read the rest of this entry »

AddThis Social Bookmark Button