இன்றைய நவீன யுகத்தில் சமூகத்தில் பல்வேறு சீர்கேடுகள் ஏற்படுவதற்கு வேலையில்லாப் பிரச்சினை ஒரு மூல காரணம் எனலாம். அதாவது வேலையில்லாப் பிரச்சினை என்பது ஒரு நாட்டின் மொத்த ஊழியப்படையில் வேலைவாய்ப்புப் பெறுவதற்கு முயற்சியும் தகுதியும் ஆர்வமும் கொண்டிருந்த போதிலும் தகுந்த வேலை வாய்ப்பினை பெற முடியாதிருக்கும் மக்களின் பங்கு அதிகரிப்பதை குறிக்கும். இங்கு ஊழியப்படை எனப்படுவது சனத்தொகையில் 15 – 64 வயதுக்கு இடைப்பட்டவர்களில் அங்கவீனர்கள், நிரந்தர நோயாளிகள், வேலை செய்ய விரும்பாதவர்கள் முதலானவர்களைக் கழித்துப் பெறப்படும் தொகையாகும். Read the rest of this entry »













