யுத்தம் நடந்த பகுதிகளில் இப்போது என்ன நடக்கிறது

January 23rd, 2012 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

விடுதலைப் புலிகளுக்கும் ஸ்ரீலங்கா ராணுவத்துக்கும் இடையிலான யுத்தம் முடிவுக்கு வந்தபின், அந்த போரால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட மக்கள் தற்போது என்ன நிலையில் உள்ளார்கள்? பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வெவ்வேறு வழிகளில் வழங்கப்படுவதாக செய்திகள் வருகின்றன.

அவை எந்தளவுக்கு போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சாதாரண வாழ்க்கையை பெற்றுக் கொடுத்திருக்கிறது? இல்லது, பெற்றுக் கொடுக்க முடிந்திருக்கிறதா? Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

கேள்விக்குறியாகும் இன்றைய கல்வி

January 11th, 2012 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதில் நாளைய இளைஞர்கள் பெரும் பங்காற்றவுள்ளனர். இவர்களை சரியான பாதையில் வழிநடத்திச் செல்ல வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும். பாடசாலையை பொறுத்தமட்டில் ஆசிரியர்களும், வீட்டில் பெற்றோரும் இந்த பொறுப்பை வகிக்கின்றனர்.

அண்மையில் வெளியாகியிருந்த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் பெரும் குளறுபடியாக அமைந்திருந்தமை அனைவரும் அறிந்த விடயமே. பல மாணவர்கள் தமது பெறுபேறுகள் மாற்றமடைந்து வெளிவந்திருந்தமையையிட்டு பெரிதும் குழப்பமடைந்திருந்தனர். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

தீவிர தமிழ்த் தேசியவாதம் சியோனிசத்தைவிட பயங்கரமானது

January 9th, 2012 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

சட்டத்தரணி எஸ்.எம்.எம். பஷீர் அவர்கள் மனித உரிமைச் செயற்பாட்டாளராகவும் மனித உரிமைச் சட்டத்தரணியாகவும் பணியாற்றி வருபவர். முஸ்லிம்களின் மனித உரிமை மீறல்களை, அவர்களது பிரச்சினைகளை சர்வதேச தரத்திற்கு நகர்த்தியதில் சட்டத்தரணி பஷீர் அவர்களுக்கு பெரும் பங்குள்ளது. அந்தப் பணியை அவரது உயிருக்கு ஆபத்து இருந்த போதிலும் அவர் செய்தார். இன்றும் அதனை அவர் செய்து வருகிறார். மனித உரிமை மீறல்களுக்கு எதிராக துணிந்து குரல் கொடுப்பவர்களில் பஷீர் முக்கியமானவர். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

காணி பொலிஸ் அதிகாரப் பகிர்வுக்கு மலையகத் தலைமைகள் ஆதரவு

January 6th, 2012 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசு பேச்சில் இழுபறி நிலையை எட்டியுள்ள காணி, பொலிஸ் அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்காமல், இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான அரசியல் தீர்வு ஒன்று அமைய முடியாது என்று மலையகத் தமிழ் அரசியல் வாதிகளும் வலியுறுத்தி உள்ளனர். எனவே அந்த அதிகாரங்களை அரசு வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

விமானத்தள விஸ்தரிப்பால் குடிநீருக்கு அலையும் குடும்பங்கள்

January 5th, 2012 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

மட்டக்களப்பு மாவட்டத்தில் வவுணதீவுப்பிரதேசத்தில் அமைந்துள்ள ஒரு பின்தங்கிய பிரதேசமே வலையிறவுக் கிராமம். சுற்றிலும் நீர்வளம் பொருந் தியதாக அக்கிராமம் காணப்பட்டாலும் அம்மக்கள் குடிநீருக்காக காத்துக்கிடக்கவேண்டிய நிலையே இன்று காணப்படுகின்றது.

வலையிறவுக் கிராம மக்கள் பொதுவில் ஒரு குழாய்க்கிணறை அமைத்து அதிலிருந்தே நீரைப் பெற்று வருகின்றனர். சேத்துக்குடா திமிலைத்தீவு; புது நகர்; வவுணதீவு பத்தரைக்கட்டை ஆகிய கிராமங் களைச் சேர்ந்த மக்கள் குடிநீரைப் பெற்றுக் கொள் வதற்காக பல மணிநேரம் காத்திருக்க வேண்டிய நிலையும் பல மைல் தூரங்கள் சென்று அதனைப் பெற வேண்டிய நிலையும் காணப்படுகிறது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

வடக்கு – கிழக்கு இணைப்பு சரியா? சாத்தியமா?

January 4th, 2012 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

இனப் பிரச்சனைக்கு சண்டை மூலம் தீர்வுகாணமுடியாது என்ற நிலைமை தோன்றிய பின்னர், சமாதானத்தின் மூலம் முடிவுகாண, அரசும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் பேச்சுவார்த்தைகளை தொடங்கி ஒரு வருடம் உருண்டோடி விட்டது. பேச்சுவார்த்தைகளில் பெரிய முன்னேற்றம் ஒன்றும் ஏற்பட்டுவிடவில்லை என்றாலும் – உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தோன்றிய அல்லது தோற்றுவிக்கப்பட்ட பிரச்சினைகளை வைத்துப்பார்க்கும் போது, அது தொடர்ந்து நடைபெறுவதே ஓர் அதிசயம் தான்! Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

Destruction of Old Park and Distortion of Truth

January 1st, 2012 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

In the absence of war-induced destruction, damage, disappearance and killings, it has become necessary for the regressive forces with vested interests in the north to regularly engage manipulating news – falsifying or distorting the truth – in order to further the ‘Tamil cause’. Tamils being continuously nourished by aggressive nationalism, accept these rumours and innuendoes without further examination. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

தீர்வில் இணக்கப்பாட்டுடன் பொலிஸ் காணி அதிகாரங்கள் வேண்டும்

December 31st, 2011 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

அரசியல் தீர்வில் இணக்கப்பாட்டுடன் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும். இதற்கான வழிமுறைகளைக் கையாண்டு அரசாங்கம் புதுவருடத்தில் இனப்பிரச்சினைக்கு தீர்வை வழங்கிவிடும் என்று அமைச்சர் வாசுதேவநாணயக்கார நம்பிக்கை தெரிவித்தார்.

தமிழ் அரசியல் கட்சிகளுடன் அரசாங்கம் பரந்தளவில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றது. விரைவில் பாராளுமன்ற தெரிவுக் குழு ஊடாக தீர்வு வந்துவிடும் என்றும் அவர் குறிப்பிட்டார். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

பொறிக்குள் சிக்கப் போவது யார்?

December 30th, 2011 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

2011ஆம் ஆண்டு முடிவுக்கு வருவதற்கு ஒருசில நாட்களே உள்ளன. இனப்பிரச்சினைக்கான அரசியல்தீர்வு குறித்து அரசாங்கம் 2011ஆம் ஆண்டு இறுதிக்குள் ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்துவிட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறி வந்தது நடைமுறைச் சாத்தியமற்றதாகியுள்ளது.

அரசாங்க தரப்புடன் அடுத்தடுத்து நடத்தப்பட்ட பேச்சுக்கள் எதுவும் முன்னேற்றம் காணப்படாமலேயே முடிந்து போயுள்ளன. இரண்டு தரப்புமே எந்தவொரு கட்டத்திலேனும் இணக்கப்பாட்டை சந்திக்கக் கூடியளவுக்கு நெருங்கவில்லை. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

வடக்கும் கிழக்கும் இணைவதால் லாபம் என்ன?

December 28th, 2011 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

வடக்கும் கிழக்கும் இணைய வேண்டும் என்று தமிழ்க் கூட்டமைப்பினர் கூறுகின்றனர். இணைவதால் கிழக்கு மாகாணத்திற்கு என்ன இலாபம் என்று அவர்களிடம் நான் கேட்க விரும்புகிறேன் என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் கேள்வியெழுப்பியுள்ளார். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

சண்டைகள் அதிகாரத்திற்காகத்தான் பிடிக்கப்படுகின்றன

December 26th, 2011 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

அதிகாரப் போட்டிகளில் ஈடுபடுவோரே அதிகம் வன்முறைகளில் ஈடுபடுகின்றார்கள். இவர்கள் அதிகாரத்திற்காகத்தான் சண்டை பிடிக்கின்றார்கள். வன்முறையில் ஈடுபடுபவர்கள் அதற்குப்பழக்கப்பட்டு அதில் விருப்புடையவர்களாக காணப்படுகின்றனர் என உளமருத்துவ நிபுணர் வைத்திய கலாநிதி எஸ். சிவயோகன் தெரிவித்துள்ளார்.

பெண்கள் வன்முறை ஒழிப்புவாரத்தை முன்னிட்டு யாழ் மாவட்ட செயலகமும் பால்நிலை வன்முறைக்கெதிரான நிறுவனமும் இணைந்து நடாத்திய ஊடகவியலாளருக்கான கருத்தரங்கில் யாழ்ப்பாண மாவட்டத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் அதனால் ஏற்படும் உளசமூக பிரச்சனைகளும் என்னும் தொனிப்பொருளில் வளவாளராகக் கலந்துகொண்டு கருத்துரை ஆற்றும்போது இவ்வாறு தெரிவித்தார். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

பேருந்து தரிப்பிடம் இல்லாமல் தவிக்கும் முல்லைத்தீவு மக்கள்

December 24th, 2011 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

‘அம்மா என்னம்மா இன்னும் பஸ்ஸை காணேல்ல? எப்போ பஸ் வரும்’
‘பொறம்மா! இன்னும் கொஞ்ச நேரத்தில பஸ் வந்திடும்…’

இந்த உரையாடல் முல்லைத்தீவு நகரத்தில் ஒரு தாயும் மகளும் பேசிக்கொண்டது. போக்குவரத்து என்பது ஒரு சாதாரண மனிதனுக்கு எந்தளவு முக்கியத்துவம் வாய்ந்ததும் தவிர்க்க முடியாததும் என்பது நாம் அனைவரும் அறிந்த விடயமே. உள்நாட்டு வருமானத்தில் போக்குவரத்து பாரிய பங்களிப்பை செலுத்தி வருகின்றது. போக்குவரத்து சீராக இயங்காத நிலையில் பாதிக்கப்படுவதும் பொதுமக்கள்தான். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

ஜனநாயகமும் ஜனநாயக துஷ்பிரயோகமும்

December 22nd, 2011 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

வன்னியில் போர் மிக உக்கிரமாக நடந்து கொண்டிருந்த நாட்கள் அவை.

தினமும் சாவு. நூற்றுக்கணக்கானவர்கள் காயம். இரத்தம் பெருக்கெடுத்தோடிய நாட்கள். அவலம் பெரும் நாடகமாடியது. மனிதர்கள் செயற்றுப் போனார்கள். செயலற்றுப் போகும்போது எதுவும் வெறும் சடமே என்ற நிலை உருவாகிறது. அப்படித்தான் மனிதர்கள் அப்போது அங்கே இருந்தார்கள். காற்றில் எற்றுண்டு போகும் சருகுகளாக, ஆற்றில் அள்ளுண்டு போகும் துரும்பாக.

அங்கே அப்பொழுது எவரிடமும் கனவுகளிருக்கவில்லை. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

“பெண்கள் வந்திருக்கிறோம்.. அந்தாளை வெளியே வரச் சொல்லுங்கள்!”

December 21st, 2011 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

ஆயிரக் கணக்கான பெண்கள் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை கய்ரோ வீதிகளில் ஒன்று திரண்ட காட்சி, எகிப்திய சரித்திரம் சமீபத்தில் காணாதது!

கடந்த 1919-ம் ஆண்டில் எகிப்தின் பெண்கள் ஹூடா ஷாராவியின் தலைமையில் கய்ரோ வீதிகளில் இறங்கி 92 ஆண்டுகளின்பின் இப்போதுதான் ஆட்சிக்கு எதிராக போராட ஆயிரக் கணக்கான பெண்கள் வீதியில் இறங்கியிருக்கிறார்கள். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

“ஒரு கையால விறகு கொத்தியும் விக்கிறன்”

December 21st, 2011 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

வன்னிப் பெருநிலத்தில் தமக்கென ஒரு சுயதொழிலை உருவாக்கி வாழ்ந்து கொண்டிருந்த பலரது வாழ்வு இன்று சிதைந்து சின்னா பின்னமாய்க் கிடக்கிறது. யுத்தம் இன்று நின்று போயிருந்தாலும் அது விட்டுச் சென்ற பாதிப்புக்கள் ஒட்டுமொத்த மக்களுடைய வாழ்க்கையில் மாறாத வடுக்களை ஏற்படுத்திவிட்டுச் சென்றிருக்கிறது.

பலரது அவயவங்கள் அநியாயமாக பறிக்கப்பட்டுள்ளன. இன்று அவர்கள் அவயவங்களை இழந்து, தொழில் இழந்து கஷ்டப்பட்டு தங்கள் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button