ஹொரணையில் போலி கச்சேரி சுற்றிவளைப்பு : தம்பதி கைது

February 10th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

ஹொரணை, போருவதன்ட பிரதேசத்தில் இயங்கி வந்த போலி கச்சேரி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் போலி ஆவணங்களுடன் தம்பதி ஒன்று கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு தெற்கு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஆப்கானில் பெண் ஊடகவியலாளர்களின் வானொலிநிலையத்திற்குள் நுழைந்த தலிபான்கள் : ஒலிபரப்பிற்கு தடை

February 10th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

ஆப்கானில் பெண் ஊடகவியலாளர்கள் ஒரேயொரு வானொலி நிலையத்திற்குள் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்ட தலிபான்கள் அந்த வானொலி சேவையை தடை செய்துள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஜனாதிபதி அநுரகுமார ஐக்கிய அரபு இராஜ்ஜியம் விஜயம்

February 10th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இந்த ஆண்டுக்கான உலக அரசுகள் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (10) ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு பயணிக்கிறார்.ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதி மொஹமட் பின் சயிட் அல் நஹியாவின் அழைப்பிற்கிணங்க ஜனாதிபதியின் இந்த விஜயம் அமையவுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தோட்ட மீட்பு

February 10th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் உள்ள பயண பொதிகள் பகுதிக்கு அருகில் 9 மி.மீ தோட்டா ஒன்று மீட்கப்பட்டுள்ளது. சிறிலங்கன் தரை உதவி பணிப்பெண்ணால் இது அவதானிக்கப்பட்டு, மேலதிக விசாரணைக்காக இன்று (10) அதிகாலை விமான நிலைய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

குருநாகலில் இடம்பெற்ற கோர விபத்து : 4 பேர் பலி

February 10th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

தொரடியாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்புள்ளை – குருநாகல் பிரதான வீதியில், தோரயாய பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். கதுருவெலவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பயணிகள் பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிச் செல்வதற்காக நிறுத்தப்பட்டிருந்தபோது, ​​அதே திசையில் பயணித்த மற்றொரு தனியார் பேருந்து நிறுத்தப்பட்டிருந்த பேருந்தின் பின்புறத்தில் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

நாடளாவிய மின்தடைக்கான உண்மையான காரணத்தை வெளியிட்ட மின்சார சபை

February 10th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

நாடளாவிய ரீதியில் நேற்றையதினம் ஏற்பட்ட மின் தடைக்கான காரணத்தை, இலங்கை மின்சார சபையின் பொறியாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ளது. மொத்த மின்சார உற்பத்தியில் முக்கிய பங்காற்றும் சூரிய மின் உற்பத்தியும் முழு மின்சார அமைப்பின் வீழ்ச்சி என்பன, மின்தடைக்கான முதன்மைக் காரணங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

கொழும்பு மனிதப் புதைகுழிகளில் இருந்து 16 பேரின் எலும்புக்கூடுகள் மீட்பு

February 10th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

கொழும்பு துறைமுகப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழிகளில் தற்போது வரை முன்னெடுக்கப்பட்ட அகழ்வாராய்ச்சிகளில் சுமார் 16 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அதில் இரண்டு குழந்தைகளின் எலும்புக்கூடுகள் இருந்துள்ளதாகவும் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவா தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்படவுள்ள மாற்றங்கள்

February 9th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், பயணிகள் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் (BIA) அதன் வரவேற்பு பீடத்தில் குறிப்பிடத்தக்க மறுவடிவமைப்புகளை செய்யவுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

அதிகாலையில் வந்த தொலைபேசி, எனது தந்தை மிகவும் மனவருத்தம் அடைந்தார் : நாமல் ராஜபக்ச

February 9th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனது இளைய மகன் பாலச்சந்திரன் உயிரிழந்த செய்தி கேட்ட முன்னாள் ஜனாதிபதியும் எனது தந்தையுமான மகிந்த ராஜபக்ச மிகவும் மன வருத்தம் அடைந்தார் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மின் தடைக்கான காரணம் வெளியானது

February 9th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

பாணந்துறை உப மின் கட்டமைப்பில் ஏற்பட்ட திடீர் மின் தடை காரணமாக நாடளாவிய ரீதியில் மின் விநியோகத் தடை ஏற்பட்டதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

எரிவாயு விலை திருத்தத்திற்கான நிதி அமைச்சின் அனுமதி தாமதம்

February 9th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

பெப்ரவரி மாதத்திற்கான எரிவாயு விலை திருத்தத்திற்கு நிதி அமைச்சின் அனுமதி இதுவரை கிடைக்கவில்லை என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. எரிவாயு விலை திருத்தம் தொடர்பான பரிந்துரைகள் இந்த மாதத்தின் முதல் வாரத்தில் நிதி அமைச்சகத்தின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

32,000 கஞ்சா செடிகளுடன் சந்தேகநபர் கைது

February 9th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

கோனகங்கார பொலிஸ் பிரிவில் கடந்த 05 நாட்களாக பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, நேற்று சனிக்கிழமை (08) கஞ்சா பயிரிடப்பட்ட தோட்டங்களிலிருந்து 32 ஆயிரத்து 380 கஞ்சா செடிகளுடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஜனாதிபதி அநுரகுமார மக்களை தூண்டிவிடுவதற்காக தேர்தல் பிரச்சார மேடைகளில் குறிப்பிட்ட விடயங்கள் அனைத்தும் இன்று பொய்யாக்கப்பட்டுள்ளது : உதய கம்மன்பில

February 9th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

அரசியல் பழிவாங்களுக்காக அரசாங்கம் நீதிக்கட்டமைப்பையும் பயன்படுத்துகிறது. சட்டமா அதிபருக்கு அரசாங்கம் அழுத்தம் பிரயோகிப்பது தெளிவாக விளங்குகிறது. எதிர்வரும் காலங்களில் பலர் கைதாகலாம் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார். கொழும்பில் சனிக்கிழமை (08) நடைபெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

தையிட்டி விகாரை இடிக்கப்பட வேண்டும் :சிவஞானம் ஸ்ரீதரன்

February 9th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

மக்களின் விருப்புக்கு மாறாக சட்டவிரோதமாக தையிட்டியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சர்வாதிகார விகாரை இடிக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் வலியுறுத்தியுள்ளார். சமகால அரசியல் தொடர்பில் யாழ் ஊடக அமையத்தில் நேற்று (08) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்தே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இலங்கையின் இன்றைய காலநிலை பற்றிய தகவல்கள்

February 9th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button