மின்சாரக் கட்டணம் தொடர்பில் இன்று இறுதி முடிவு

January 17th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

மின்சார கட்டண திருத்தம் தொடர்பான இறுதி அறிக்கையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று (17) வெளியிடவுள்ளது. அடுத்த 6 மாதங்களுக்கு எந்தவித திருத்தமும் இல்லாமல் மின்சாரக் கட்டணங்கள் அப்படியே பராமரிக்கப்பட வேண்டும் என்ற யோசனையை இலங்கை மின்சார சபை சமர்ப்பித்திருந்தது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இலங்கை இந்திய மீனவர் விவகாரம் : மீனவர்களை ஏமாற்ற சிலர் முயற்சி : முன்னாள் அமைச்சர் டக்ளஸ்

January 17th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்பில் தமிழ்நாட்டு முதலமைச்சருடன் பேசப்போவதாக கூறி வடபகுதி மீனவர்களை சில அரசியல்வாதிகள் ஏமாற்ற முயற்சிப்பதாக முன்னாள் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றம் சாட்டினார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மன்னார் நீதிமன்றத்திற்கு முன் துப்பாக்கிச் சூடு: மன்னார் பொலிஸார் முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் : செல்வம் அடைக்கலநாதன் எம்.பி.

January 17th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

மன்னார் நீதிமன்றத்திற்கு முன்னால் 16ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்துள்ள இச்சம்பவத்திற்கு மன்னார் பொலிஸார் முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

சவுதி தூதுவர் : பிரதமர் சந்திப்பு

January 16th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இலங்கைக்கான சவுதி அரேபியத் தூதுவர், காலித் பின் ஹமூத் அல்கஹ்தானி, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய சந்திப்பு இன்று வியாழக்கிழமை 16 ஆம் திகதி பிரதமர் அலுவலகத்தில் இடம் பெற்றுள்ளது. இந்த சந்திப்பின்போது, ​​இருநாடுகளுக்கும் இடையிலான பொது நலன்கள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மன்னார் நீதவான் நீதி மன்றத்துக்கு முன்பாக இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி : இருவர் படுகாயம்

January 16th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

மன்னார் நீதவான் நீதி மன்றத்துக்கு முன்பாக இன்றைய தினம்(16.01) வியாழக்கிழமை காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்ததுடன்,மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். வழக்கொன்றுக்காக நீதிமன்றத்திற்கு வருகை தந்தவர்களை இலக்கு வைத்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இரு பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து : பலர் காயம்

January 16th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

தங்காலை – வீரகெட்டிய வீதியில் 02 ஆவது மைல்கல் அருகில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று வியாழக்கிழமை (16) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மல்லாவியில் மோட்டார் சைக்கிள் தீக்கிரை 

January 16th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி கல்விளான் பகுதியில் வயல் வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று இனந்தெரியாத நபர்களால் வியாழக்கிழமை (15) தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

அரிசி தட்டுப்பாட்டிற்கு அரசாங்கமே பொறுப்பு : ரோஹிணி கவிரத்ன எம்.பி

January 16th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

தைப்பொங்கல் கொண்டாடுவதற்குக் கூட பச்சை அரிசி இல்லாமள் போனதற்கு, கடந்த அரசாங்கம் மக்களுக்கு இலவச அரசி வழங்கியமையே காரணம் என அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்திருந்தார். அரசாங்கத்தின் இத்தகைய அறிவிப்பானது அடிப்படையற்றதும் இயலாமையை மறைக்கும் செயல் என்று பாராளுமன்ற உறுப்பினர் ரோஹிணி கவிரத்ன தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

தலவாக்கலை மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

January 16th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

தலவாக்கலை மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து ஆண் ஒருவரின் சடலம் 15ஆம் திகதி புதன்கிழமை மாலை மீட்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

துயரத்துடனும் நம்பிக்கையுடனும்-காசாவில் பாலஸ்தீனியர்களிற்கு கசப்பும் இனிப்பும் கலந்த ஒரு நாள்

January 16th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

இஸ்ரேலிற்கும் ஹமாசிற்கும் இடையிலான யுத்த நிறுத்த அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து காசா நகரில் உள்ளபாலஸ்தீனியர்கள் மகிழ்ச்சியையும் துயரத்தினையும் வெளிப்படுத்திவருகின்றனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

கொழும்பின் பல பகுதிகளில் இன்று நீர் வெட்டு

January 16th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

கொழும்பின் பல பகுதிகளில் 12 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

நாட்டின் பல பகுதிகளுக்கு வானிலை எச்சரிக்கை விடுப்பு

January 16th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

நாட்டின் கரையோரப் பகுதிகளல் பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பாக இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை நாளை காலை ஆறு மணி வரை நடைமுறையில் இருக்கும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

வெறும் 42 வினாடிகளில் விற்று தீர்க்கப்பட்ட ரயில் டிக்கெட்டுகள் : சிஐடியில் முறைப்பாடு

January 16th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

இலங்கையில் உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான எல்லவுக்குச் செல்லும் ரயில்களுக்கான இ-டிக்கெட்டுகள் மிக விரைவாக விற்பனை செய்யப்பட்டதன் பின்னணியில் சந்தேகிக்கப்படும் சதி குறித்து குற்றப் புலனாய்வுத் துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வெளியிடப்பட்ட 42 வினாடிகளுக்குள் அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்ததாகக் கூறப்படுகிறது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான் மீது கத்திக்குத்து : வைத்தியசாலையில் அனுமதி

January 16th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான் மீது மேற்கொள்ளப்பட்ட கத்திக்குத்தால் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

கம்பளையில் கடத்தப்பட்ட சிறுமி : சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்

January 16th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

கம்பளை, தவுலகல பகுதியில் வானில் பாடசாலை மாணவி ஒருவரை கடத்திச் சென்ற சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரையும், கடத்தலுக்கு ஆதரவளித்த மற்றொரு சந்தேக நபரையும் இம்மாதம் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button