வானிலை தொடர்பான எச்சரிக்கை

January 12th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.கொழும்பிலிருந்து புத்தளம் வழியாக காங்கேசன்துறை வரையிலான கடற்கரைக்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 50-60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

போலி ஆவணங்களைத் தயாரித்த மூன்று பேர் கைது

January 11th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

மோசடியாக தயாரிக்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரம் மற்றும் பிற வாகன உரிமங்களை தயாரித்து பணம் பெறும் மோசடியில் ஈடுபட்டு வந்த ஒருவரை பொலன்னறுவை குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் நேற்று (10) மேற்கொண்ட சுற்றிவளைப்பில் கைது செய்துள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பேருந்து விபத்து – 12 பேர் காயம்

January 11th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

கொழும்பிலிருந்து பசறை நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று பசறையில் உள்ள 15வது தூண் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. சாரதி தூங்கியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

யாழில் பெருந்தொகையான ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞன் கைது

January 11th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

யாழ். நகரில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞன் இன்று சனிக்கிழமை (11) கைது செய்யப்பட்டுள்ளார். வண்ணார்பண்ணையைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞனே யாழ். மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

உதயங்க வீரதுங்கவுக்கு 17 ஆம் திகதி வரை விளக்கமறியல்

January 11th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நுகேகொட நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். முன்னாள் இராஜதந்திரியான உதயங்க வீரதுங்க அவரது அயலவர் ஒருவரைத் தாக்கியமைக்காக வெள்ளிக்கிழமை (10) மிரிஹான பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இலங்கையின் பத்து மாவட்டங்களில் 56 வீதமான குடும்பங்கள் உணவுப் பாதுகாப்பின்மையால் பாதிப்பு பட்டினி நிலை ஆய்வில் தகவல்

January 11th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

லங்கையின் பத்து மாவட்டங்களில் 56 வீதமான குடும்பங்கள் உணவுப்பாதுகாப்பின்மையால் பாதிக்கப்பட்டுள்ளமையும்,ஒரளவு அல்லது மோசமான பட்டினிநிலையில் சிக்குண்டுள்ளமையும் ஆய்வொன்றின் போது தெரியவந்துள்ளது. பியான் FIAN என்ற அமைப்பு முன்னெடுத்த ஆய்வின்போது இது தெரியவந்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பொரளையில் 12வது மாடியில் இருந்து விழுந்த 16 வயது சிறுமி உயிரிழப்பு

January 11th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

பொரளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில், அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து விழுந்து சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (10) இரவு இடம்பெற்றுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ரணில் விக்கிரமசிங்க அரிசியை இலவசமாக வழங்கியதால்தான் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது : வஜிர அபேவர்தன

January 10th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரிசியை இலவசமாக வழங்கியதால் தான் தற்போது அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறும் குற்றச்சாட்டை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. அனுபவமின்மை மற்றும் முகாமைத்துவம் செய்வதில் உள்ள குறைப்பாடுகளே இதற்கு பிரதான காரணம் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

கொச்சிக்கடையில்  நீர் குழியில் விழுந்து ஒருவர் பலி

January 10th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

நீர்கொழும்பு கொச்சிக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பவுலுக் சில்வா மாவத்தையில் திரும்பும் சந்திக்கு அருகில் உள்ள நீர் குழியில் விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

உழவு இயந்திரத்திலிருந்து தவறி விழுந்து ஒருவர் பலி

January 10th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

நகர சபை உழவு இயந்திரத்தின் டிரெய்லரில் பயணித்த ஊழியர் ஒருவர் அதிலிருந்து தவறி விழுந்து அனுராதபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

நூறு கைதிகளுடன் சேர்த்து வெலிக்கடை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார் : ஞானசார தேரர்

January 10th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கலகொட அத்தே ஞானசார தேரர் தற்போது வெலிக்கடை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் சிறைச்சாலையின் ‘கே’ பிரிவில் அடைக்கப்பட்டுள்ளார். கிட்டத்தட்ட நூறு கைதிகளுடன் ஞானசார தேரரும் அந்த பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இன்று நீதிமன்றத்தில் ஆஜரான முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன்

January 10th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் இன்று வெள்ளிக்கிழமை களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜரானார். கந்த 2021 ஆம் ஆண்டு இராஜாங்க அமைச்சராகவும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவராகவும், பதவி வகித்த வேளையில், காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் நேசகுமார் விமல்ராஜ்ஜை அச்சுறுத்தியதாக முறைப்பாடு செய்யப்பட்டது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மட்டக்களப்பு பாசிக்குடா கடலில் மூழ்கி ரஷ்ய பிரஜை பலி

January 10th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

மட்டக்களப்பில் பாசிக்குடா கடலில் நீராடச் சென்ற ரஷ்ய நாட்டு சுற்றுலா பயணி ஒருவர் கடல் அலையால் இழுத்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் இன்று (10) இடம்பெற்றுள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மர்மமான முறையில் கொல்லபட்ட பெண் : மயானத்துக்கு அருகில் சடலம் மீட்பு

January 10th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

அநுராதபுரம், மதவாச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுவெல மயானத்திற்கு அருகிலுள்ள குழியில் நேற்று மாலை பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

விமானத்தில் பயணித்த பெண் பயணி மீது பாலியல் துஷ்பிரயோகம் : இலங்கையர் மீது குற்றச்சாட்டு

January 10th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

அவுஸ்திரேலியா செல்லும் விமானத்தில் பயணித்த பெண் ஒருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் இலங்கையர் ஒருவருக்கு எதிராக நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவருக்க நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button