150 மி.மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை

November 27th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

தென்மேற்கு வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை நவம்பர் 26, 2024 அன்று இரவு 11.30 மணியளவில் திருகோணமலைக்கு தென்கிழக்கே சுமார் 190 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டது. இது இன்று (நவம்பர் 27) மேலும் தீவிரமடைந்து நாட்டின் கிழக்கு கடற்கரைக்கு அருகே வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து சூறாவளி புயலாக மாற வாய்ப்புள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மனைவிக்கு கணவன் செய்த, அகோரச் செயல்

November 26th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

பதுளை மாவட்டத்திற்குட்பட்ட கிராமம் ஒன்றில் மனைவியின் மோதிர விரலை தவிர ஏனைய 4 விரல்களையும் கணவன் வெட்டி எடுத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கணவன் தனது வலது கையின் நான்கு விரல்களையும் துண்டித்து, முகத்தையும் கழுத்தையும் கூரிய ஆயுதத்தால் வெட்டியதில் பலத்த காயமடைந்த பெண் பதுளை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

கொழும்பில் 17 வயது இளைஞன் படுகொலை – கூரிய ஆயுதங்களுடன் வீட்டுக்குள் புகுந்த கும்பலினால் சம்பவம்

November 26th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

கிரேன்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒருகொடவத்த பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று (25) காலை பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

அமைச்சுக்களின் விடயதானங்கள் வர்த்தமானியில் வௌியீடு

November 26th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

அமைச்சர்களின் விடயதானங்கள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

சீரற்ற வானிலை – யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 2,040 குடும்பங்கள் பாதிப்பு

November 26th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்பொழுது தொடர்ச்சியாக ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பணிப்பாளர் டிஎன் சூரியராஜா தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

சரிந்து விழுந்த மண்மேட்டில் சிக்கி பெண் பலி

November 26th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

சீரற்ற வானிலை காரணமாக பண்டாரவளை பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று (26) காலை 7 மணியளவில் இடம்பெற்றதாக பதுளை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ருஹுனு பல்கலைக்கழகத்திற்கு தகுதிவாய்ந்த அதிகாரி

November 26th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

ருஹுனு பல்கலைக்கழகத்தின் நிர்வாக நடவடிக்கைகளை மேற்பார்வை செய்வதற்காக, அப்பல்கலைக்கழகத்தின் உபவேந்தருக்கு பதிலாக தகுதி வாய்ந்த அதிகாரியாக சிரேஷ்ட பேராசிரியர் ஆர். எம். யு. எஸ். கே. ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

உரிய காலத்துக்கு முன் உயர்தர பரீட்சை: அமைச்சர் ஹரிணிக்கு எதிராக மாணவி வழக்கு?

November 26th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை நடத்துவதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவை பிறப்பிக்கக் கோரி மாணவியொருவர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை, டிசம்பர் 12ஆம் திகதி ஆராய்வதற்கு உயர் நீதிமன்றம் நேற்று திங்கட்கிழமை (25) தீர்மானித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

நாட்டில் சீரற்ற காலநிலை: காற்றின் வேகம் அதிகரிப்பு

November 26th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

வடக்கு, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மிகப் பலத்த மழைவீழ்ச்சியும் கடும் காற்றும் எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

தேசிய மற்றும் சர்வதேச கடன்கள் அரசாங்கத்துக்கு பாரிய சவால்; பொருளாதார மீட்சிக்கான திட்டங்கள் வெளிப்படைத்தன்மையாக இருத்தல் வேண்டும் : பாட்டலி சம்பிக்க ரணவக்க

November 25th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

தேசிய மற்றும் சர்வதேச கடன்கள் அரசாங்கத்துக்கு பாரிய சவாலாகும். பொருளாதார மீட்சிக்கான நடவடிக்கைகளை அரசாங்கம் வெளிப்படைத்தன்மையுடன் முன்னெடுக்க வேண்டும். நாட்டின் நிதி நிலைமை குறித்து மக்களுக்கு உண்மையை குறிப்பிட வேண்டும். பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு நாட்டு மக்களின் ஒத்துழைப்பு அத்தியாவசியமானது என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான செயலமர்வு இன்று: இலத்திரனியல் வாக்களிப்பு முறை குறித்த நடைமுறை அமர்வு

November 25th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

பத்தாவது நாடாளுமன்றத்தின் புதிய உறுப்பினர்களுக்கான திசைமுகப்படுத்தல் செயலமர்வு இன்று முதல் இன்று திங்கட்கிழமை முதல் எதிர்வரும் 03 தினங்களுக்கு நடைபெறவுள்ளது.இதன்படி, முற்பகல் 9.30 முதல் பிற்பகல் 4.30 வரை நாடாளுமன்ற குழு அறை இலக்கம் 01 இல் நடத்தப்படவுள்ளது. புதிய நாடாளுமன்றத்தின் ஆரம்பத்தில் சம்பிரதாயபூர்வமாக முன்னெடுக்கப்படும் நடவடிக்கையாக இந்த திசைமுகப்படுத்தல் செயலமர்வு இம்முறையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

வங்கக்கடல் பகுதியில் இன்று காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு: கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவிப்பு

November 25th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

இயற்கை பேரிடர்கள் குறித்து நாட்டின் பல பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்காள விரிகுடாவை சுற்றியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியே இதற்கு காரணம்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மஹிந்த தேசப்பிரியவின் வீட்டில் திருட்டு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

November 24th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவின் அம்பலாங்கொடையில் உள்ள வீட்டில் சுமார் 3 இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

சட்டவிரோத சிகரெட்டுக்களுடன் விமான நிலையத்தில் கைதான நபர்

November 24th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட ஏராளமான சிகரெட்டுகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் விமான நிலையப் பிரிவின் அதிகாரிகளால் நேற்று (23) சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இந்த வருடத்தில் மாத்திரம் 497 இந்திய மீனவர்கள் கைது

November 24th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

இந்த வருடத்தில் நாட்டின் கடல் எல்லையை மீறிய குற்றச்சாட்டில் 497 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. கடற்படை பேச்சாளர் கப்டன் கயான் விக்ரமசூரிய கருத்து வௌியிடுகையில், 66 மீன்பிடி படகுகளில் வந்த இந்திய மீனவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button