நிவாரணப்பொருட்களுடன் மியன்மார் விமானம் இலங்கையில்

December 7th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மியன்மாரில் இருந்து நிவாரண பொருகள் அடங்கிய விமானம் இலங்கை வந்தடைந்தது.நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்காக மியான்மரில் இருந்து நிவாரணங்கள் அடங்கிய மியான்மார் விமானப்படையின் (Y8) விமானம் காட்டுநாயக்க விமானப்படை தளத்தை வந்தடைந்தது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

சட்டவிரோத மதுபானம் மற்றும் கோடாவுடன் 3 சந்தேக நபர்கள் கைது

December 7th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

மினுவாங்கொடை – பன்சில்கோட பகுதியில் சட்டவிரோத மதுபானம் மற்றும் கோடாவுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

கோவாவில் இடம்பெற்ற தீ விபத்தில் 23 பேர் பலி

December 7th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இந்தியாவின் மேற்கு பகுதியில் உள்ள சுற்றுலா மாநிலமான கோவாவில் உள்ள ஒரு இரவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 23 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்களில் 4 பேர் சுற்றுலாப் பயணிகள் என தெரிவிக்கப்படுகின்றது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஒருங்கிணைந்த பொறிமுறை தேவை : ஜனாதிபதி வலியுறுத்தினார்

December 6th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஒரு அனர்த்தத்திற்குப் பிறகு மக்களின் வாழ்க்கையை மீட்டெடுப்பதில், சாதாரண அரசு இயந்திரங்களுக்கு அப்பாற்பட்ட ஒருங்கிணைந்த செயல்பாட்டு பொறிமுறை தேவை என்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க வலியுறுத்தினார். கண்டி மாவட்ட செயலகத்தில் இன்று (06) காலை நடைபெற்ற கண்டி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டபோது ஜனாதிபதி இதனைக் கூறினார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

2.9 மெட்ரிக்தொன் நிவாரண பொருட்களுடன் நாட்டை வந்தடைந்த சுவிட்ஸர்லாந்து விமானம்

December 6th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

நாட்டில் அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சுமார் 2.9 மெட்ரிக்தொன் நிவாரண பொருட்களுடன் சுவிட்ஸர்லாந்து விமானம் இன்று காலை நாட்டை வந்தடைந்தது.பேரிடரில் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு சுவிட்ஸர்லாந்து அரசாங்கம் நிவாரணை உதவிகளை வழங்கிவருகிறது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை

December 6th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

பலத்த மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாவதுடன்
பலத்த மின்னல் ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ராணுவ தளத்தின் மேல் பறந்த மர்ம ட்ரோன்கள்: சுட்டு வீழ்த்திய பிரான்ஸ் ராணுவம்

December 6th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

பிரான்சில், அணு ஏவுகணைகளை ஏவக்கூடிய நீர்மூழ்கிகள் நிறுத்தப்பட்டுள்ள ராணுவ தளம் ஒன்றின் மேல் பறந்த ட்ரோன்களை ராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக யாழ்ப்பாணத்திற்காக 36 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது அந்தப் பணம் தேவையில்லை : அர்ச்சுனா இராமநாதன்

December 6th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக யாழ்ப்பாணத்திற்காக 36 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அந்தப் பணம் யாழ்ப்பாணத்திற்கு தேவையில்லை. வரவு- செலவுத்திட்டம் முடிந்த பின்னர் வேண்டுமென்றால் வடக்கிற்கு வாருங்கள். வேண்டுமென்றால் வடக்கிற்கும் கிழக்கிற்கும் புலம்பெயர்ந்தோரிடமிருந்து பணத்தை பெற்றுத்தருகின்றேன். தேவைப்பட்டால் தெற்கிற்கும் பகிர்கின்றேன். நான் ஆம் என்று கூறினால் புலம்பெயர் உறவுகள் பணத்தை அனுப்பி வைப்பார்கள் என யாழ் மாவட்ட சுயேச்சைக் குழு பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

கற்பிட்டி கடற்பரப்பில் போதைப்பொருட்களுடன் படகு ஒன்று பறிமுதல்

December 6th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

கற்பிட்டி கடற்பரப்பில் நேற்று (05) இரவு கடற்படையினர் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது, பெருமளவான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இயற்றை அனர்த்தம் என்பது எல்லா ஆட்சியாளர்களுக்கும் ஒன்றுதான் : சரத் பொன்சேகா

December 5th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இயற்றை அனர்த்தம் என்பது எல்லா ஆட்சியாளர்களுக்கும் ஒன்றுதான். கடந்த காலங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. யார் ஆட்சியில் இருந்தாலும் இறுதி விளைவு ஒன்றுதான். இம்முறை மழை மற்றும் வெள்ளம் அதிகமாக இருந்ததால் விளைவுகள் அதிகமாகின. ‘முந்தைய ஆட்சியாளர்கள் ஆட்சியில் இருந்திருந்தாலும் நிலைமை அப்படியே காணப்பட்டிருக்கும்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

‘Rebuilding SriLanka’ நிதியத்திற்கு வெளிநாடு வாழ் இலங்கையர்களிடமிருந்து இதுவரை 635 மில்லியன் ரூபா

December 5th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

‘Rebuilding SriLanka’ நிதியத்திற்கு வெளிநாடு வாழ் இலங்கையர்களிடமிருந்து இதுவரை 635 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகை கிடைத்துள்ளதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

கலாநிதி கணபதிப்பிள்ளை ஞானரெத்தினம் 40 வருட கல்விச் சேவையில் ஓய்வு

December 5th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

கலாநிதி கணபதிப்பிள்ளை ஞானரெத்தினம் 04.12.2025 திகதி 40 வருட கல்விச் சேவையில் இருந்து ஓய்வு பெறுகிறார் ஓய்வு மட்டக்களப்பு குருக்கள்மடத்தை சேர்ந்த இவர் கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியில் பௌதிக விஞ்ஞானப் பட்டதாரி ஆசிரியராக தமது கல்விச் சேவையை ஆரம்பித்து அங்கிருந்து இடமாற்றம் பெற்று மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலயத்தில் சேவையைத் தொடர்ந்தார் பின்னர் திறந்த பல்கலைக்கழக கல்விப்பீட நிரந்தர விரிவுரையாளராக நியமனம் பெற்று இன்றுவரை தனது சேவையைத் தொடருகின்றார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

படிப்படியாக உருவாகி வரும் வடகிழக்கு பருவப்பெயர்ச்சி நிலைமை

December 5th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

நாடு முழுவதும் வடகிழக்கு பருவப்பெயர்ச்சி நிலைமை படிப்படியாக உருவாகி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இந்திய அனர்த்த நிவாரணங்களை ஏற்றிய 8வது விமானமும் நாட்டுக்கு

December 4th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இந்திய அனர்த்த நிவாரண உதவிகளைத் தாங்கிய 8வது விமானமும் இன்று (04) பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. அவ்விமானத்தில் 53 மெட்ரிக் தொன் எடையுள்ள, 110 அடி நீளமான, இரண்டு வழித்தடங்களைக் கொண்ட இரும்பு பெய்லி பாலம் (Bailey bridge) ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளதுடன், இது இந்திய அரசினால் நாட்டிற்கு நன்கொடையாக வழங்கப்படவுள்ள 10 பாலங்களில் 2வது பாலமாகும்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பெரியகல்லாறு கடற்கரையில் பெண்ணொருவரின் சடலம் கரை ஒதுங்கியது

December 4th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு கடற்கரை பகுதியில் அடையாளம் தெரியாத பெண்ணொருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது. இந்த சம்பவம் இன்று வியாழக்கிழமை (04) பதிவாகியுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button