ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் தொடங்கிய போர் மேற்கு ஆசியா முழுவதும் பரவி 38வது நாளாக நேற்றும் நீடித்தது. ஹார்முஸ் ஜலசந்தியை திறக்கவும், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மேற்கொள்ளவும் ஈரானுக்கு அமெரிக்க அதிபர் 10 நாள் கெடு விதித்தார். இதற்குள் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் திறக்காவிட்டால் அந்நாட்டின் மின் உற்பத்தி நிலையங்கள், பாலங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டு ஈரானியர்கள் நரக வாழ்க்கையில் தள்ளப்படுவார்கள் என எச்சரித்தார். டிரம்பின் இந்த கெடு இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவுடன் முடிவுக்கு வந்தது. ஆனால் கடைசி வரை ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க ஈரான் ஒப்புக் கொள்ளவில்லை. இப்போரை நிறுத்த இருதரப்பினரிடமும் மத்தியஸ்தம் செய்யும் பாகிஸ்தான், எகிப்து, துருக்கி நாடுகள் இணைந்து 45 நாள் தற்காலிக போர் நிறுத்தம் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்கக் கோரும் வரைவு முன்மொழிவை ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி மற்றும் அமெரிக்காவின் மத்திய கிழக்கு தூதர் ஸ்டீவ் விட்காப்புக்கு அனுப்பி வைத்தன.
Read the rest of this entry »