இலங்கை பிரஜையான ISIS பயங்கரவாத அமைப்பின் உறுப்பினர் நியூஸிலாந்தில் சுட்டுக்கொலை

நியூஸிலாந்தின் ஓக்டன்ட் நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இலங்கை பிரஜை ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். குறித்த பகுதியில் உள்ள சுப்பர் மார்கட் ஒன்றில் நபர் ஒருவர் மேற்கொண்ட கத்திக்குத்து தாக்குதலில் 6 பேர் காயமடைந்தனர்.
உடனே செயற்பட்ட அங்கிருந்த பொலிஸார் சந்தேகநபர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். அதில் அவர் உயிரிழந்துள்ளார். பின்னர் இடம்பெற்ற விசார ணையில் குறித்த சந்தேகநபர் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய இலங்கையர் என்பது தெரியவந்துள்ளது.
இவர் 2011ம் ஆண்டு நியூஸிலாந்திற்கு சென்றுள்ளார். இந்த தகவலை நியூஸிலாந்து பிரதமர் ஜெகிர்ன்டா ஆர்டென் சர்வதேச ஊடகங்களிடம் உறுதி செய்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply