அனைத்து வரிச்சலுகைகளிலும் திருத்தம்: ரஞ்சித் சியம்பலாபிட்டிய
எதிர்வரும் மாதம் முதல் அனைத்து வரிச்சலுகைகளிலும் திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஆய்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர், சர்ச்சைக்குரிய வரி செலுத்தாமை தொடர்பில் ஆராய்வதற்கு முன்னுரிமை வழங்கப்படும் என மேலும் குறிப்பிட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply