பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாவுக்கு ஊடகத் தடை விதிப்பு

பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாவுக்கு நாளை வியாழக்கிழமை (20) முதல் மே 8 ஆம் திகதி வரை ஊடகத் தடை விதிக்கப்படும் என்று சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன புதன்கிழமை (19) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

இந்தக் காலகட்டத்தில் பாராளுமன்றத்தில் எம்.பி. கூறும் எந்தவொரு கருத்தும் ஹன்சாட்டில் இருந்து நீக்கப்படும் என்றும் சபாநாயகர் கூறினார்.

பல்வேறு தனிநபர்கள் மற்றும் சமூகங்கள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தெரிவித்த அறிக்கைகள் தொடர்பாக தனிநபர்கள் மற்றும் அமைப்புகளிடமிருந்து வந்த ஏராளமான புகார்களைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

“அவதூறான கருத்துக்களைத் தெரிவிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்ற எனது கோரிக்கைகளை எம்.பி. பலமுறை புறக்கணித்து வருவதால், நாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்” என்று சபாநாயகர் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply