கடுகதி ரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு

மருதானையிலிருந்து பெலியத்த நோக்கிச் செல்லும் கடுகதி ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த விபத்து நேற்று (14) இரவு, களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவில் உள்ள கொழும்பு-பெலியத்த ரயில் மார்க்கத்தின் 23வது தூண் அருகே நிகழ்ந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

களுத்துறை வடக்கு பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், இச்சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை வெளியிடப்படவில்லை. சடலம் நாகொட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து குறித்து களுத்துறை வடக்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply