பிரதமர் ஹரிணி அமரசூரிய சீனாவுக்கு விஜயம்
பிரதமர் ஹரிணி அமரசூரிய, ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சிமாநாட்டில் பங்கேற்க எதிர்வரும் 29 ஆம் திகதி சீனாவுக்கு விஜயம் செய்யவுள்ளார்.
தியான்ஜினில் ஓகஸ்ட் 31 அன்று நடைபெறவுள்ள இந்த மாநாட்டில், சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் உள்ளிட்ட உறுப்பு நாடுகளின் தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.
மேலும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்களையும் அவர் சந்திக்கவுள்ளார்.
அமெரிக்கா-இந்தியா உறவில் ஏற்பட்ட பதற்றங்கள் மற்றும் சீனா-ரஷ்யா கூட்டணியின் வலுவடைதல் ஆகியவை இந்த மாநாட்டுக்கு கூடுதல் முக்கியத்துவத்தை ஏற்படுத்தியுள்ளன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply