கொழும்புக்கான சேவையை ஆரம்பிக்கும் ஐரோப்பிய ‘ஸ்மார்ட்விங்ஸ்’ விமானம்

ஐரோப்பிய ஓய்வு நேர விமான நிறுவனமான ஸ்மார்ட்விங்ஸ், டிசம்பர் மாதம் முதல் போலந்தின் வார்சாவிலிருந்து ஓமானின் மஸ்கட் வழியாக கொழும்புக்கு வாராந்திர விமானங்களை ஆரம்பிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊடக அறிக்கைகளின்படி, மஸ்கட்-கொழும்பு-மஸ்கட் பிரிவில் பயணிகளை ஏற்றிச் செல்ல விமான நிறுவனம் அனுமதிக்கப்படும். இந்த சேவை போயிங் 737 MAX விமானங்களைப் பயன்படுத்தி இயக்கப்படும்.

அட்டவணையின்படி, விமானம் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் காலை 5.30 மணிக்கு வார்சாவிலிருந்து புறப்பட்டு இரவு 8.55 மணிக்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடையும்.

மஸ்கட் மற்றும் வார்சாவிற்கு திரும்பும் விமானம் கொழும்பில் இருந்து இரவு 9.55 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 5.40 மணிக்கு போலந்து தலைநகரை அடைந்துவிடும்.

ஸ்மார்ட்விங்ஸ் என்பது செக் நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனமாகும். மேலும் மத்திய ஐரோப்பாவில் வேகமாக வளர்ந்து வரும் விமான நிறுவனங்களில் ஒன்றாகும்.

இந்த விமான நிறுவனம் ஸ்மார்ட்விங்ஸ் குழுமத்தின் ஒரு பகுதியாகும். இதில் ஸ்மார்ட்விங்ஸ் போலந்து, ஸ்லோவாக்கியா மற்றும் ஹங்கேரி ஆகியவை அடங்கும். மேலும் தற்போது உலகளவில் 80 க்கும் மேற்பட்ட இடங்களுக்கு குறித்த நிறுவனம் விமானங்களை இயக்குகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply