கட்டுநாயக்க அதிவேக வீதியில் குப்பை பையை வீசிய யாழ்ப்பாண சாரதி
கட்டுநாயக்க அதிவேக வீதியில் குப்பைப் பையை வீசிய யாழ்ப்பாணத்தை சேர்ந்த 35 வயது வான் சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று(10) மதியம் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீதுவ பொலிஸ் எல்லைக்குட்பட்ட 19 கிலோ மீற்றர் தூணுக்கு அருகில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. சந்தேக நபர் குப்பைப் பையை வீசிச் செல்வதை அதிவேக நெடுஞ்சாலையில் கண்காணிப்பில் ஈடுபடும் அதிகாரிகள் கண்டுள்ளனர்.
இதனையடுத்தே வீதியில் கழிவுகளைக் கொட்டியதற்காக தேசிய நெடுஞ்சாலைச் சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டார். யாழ்ப்பாணம் அல்வாயைச் சேர்ந்த அவர் இன்று(11) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply