இலங்கையில் ஒன்லைன் நிதி மோசடி முறைப்பாடுகள் அதிகரிப்பு

ஒன்லைனில் பொருட்களை விற்பனை செய்வதாகக் கூறி பணமோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக கணினி அவசரகால பதில் மன்றம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஒன்லைனில் பொருட்களை வாங்குவதற்கு முற்பட்டால், சம்பந்தப்பட்ட நிறுவனம் பற்றிய துல்லியமான தகவல்களைப் பெற வேண்டும் என்று அதன் தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரி நிரோஷ் ஆனந்தா கூறினார்.

இதனிடையே, அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பணம் வழங்குவதில் மோசடி இடம்பெற்றுள்ளதாக கடந்த சில நாட்களாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக நிரோஷ் ஆனந்த மேலும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply