வயல் பகுதியில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி, கைக்குண்டு, வெடிமருந்துகள் கண்டுபிடிப்பு
திக்வெல்ல – கிரினெலியகந்த பகுதியில், வயல் ஒன்றில் சந்தேகத்திற்குரிய, வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ரிவால்வர், ஒரு கைக்குண்டு மற்றும் 03 ரி-56 வெடிமருந்துகள் என்பன நேற்று திங்கட்கிழமை (26) பிற்பகல் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
தங்காலை பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போ தே அவை கண்டுப்பிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கைப்பற்றப்பட்ட பொருட்கள் திக்வெல்ல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன.
அதனுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகாத நிலையில், திக்வெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply