ஜே.ஆர். ஜயவர்தனவின் யுகத்தில் நாம் இல்லை , நாம் ட்ரம்பின் உலகில் வாழ்கிறோம் : ரணில் விக்கிரமசிங்க

ஐக்கிய தேசியக் கட்சி ‘ஸ்மார்ட்’ அரசியலைத் தழுவிய ஒரு புதிய தலைமுறைத் தலைமைத்துவத்திற்காகத் தயாராகி வருவதாக அக்கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் ‘SMART UNP’டிஜிட்டல் வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவடைந்த பின்னர் பிறந்த தலைமுறையைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டிய நேரம் இது வந்துவிட்டது.

அரசியல் கட்சிகளையும் அரசியலையும் அடுத்த தலைமுறையிடம் ஒப்படைப்பதில் ஐக்கிய தேசியக் கட்சி முன்னின்று செயல்பட வேண்டும்.

மறைந்த ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன ‘மில்லினியர் தலைமுறையைத் தயார்படுத்தினார். நாம் இப்போது ’ஜென் ஷீ’ தலைமுறையிடம் பொறுப்புகளை ஒப்படைக்கத் தயாராக வேண்டும்.

நாம் ஸ்மார்ட் அரசியலை நோக்கி நகர வேண்டும் மற்றும் தொழில்நுட்பங்களைத் தழுவ வேண்டும்.

ஜே.ஆர். ஜயவர்தனவின் யுகத்தில் நாம் இல்லை. நாம் ட்ரம்பின் உலகில் வாழ்கிறோம்.

அதே சமயம் ட்ரம்பிற்குச் சவால் விடும் சீனாவின் ஆதிக்கம் நிறைந்த உலகிலும் வாழ்கிறோம்.

எமது அண்டை நாடான இந்தியா ஒரு வல்லரசாக உருவெடுத்து வரும் காலத்திலும் நாம் வாழ்கிறோம். இத்தகைய சூழ்நிலைகளை நாம் எதிர்கொள்ள வேண்டும்.

பல கட்சி ஜனநாயக ஆட்சி முறையிலேயே நாம் முன்னேறியிருக்கின்றோம். அதனை நிலைநிறுத்த சகல சக்திகளும் ஒன்றிணைய வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply