அமெரிக்கா-ஈரான் இடையே 2வது சுற்று பேச்சுவார்த்தை அடுத்த வாரம் நடக்கிறது: அதிகாரிகள் தகவல்

மேற்காசிய போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தைகளை அடுத்த வாரம் நடத்த பாகிஸ்தான் தயாராகத் தொடங்கியுள்ளது. போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்கா – ஈரான் இடையிலான பேச்சுவார்த்தைகள் கடந்த 11ம் தேதி இஸ்லாமாபாத்தில் நடந்தது. இந்த பேச்சுவார்த்தையில் எந்தவித முடிவும் எட்டப்படாமல் தோல்வியடைந்தது.

இந்தநிலையில் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தைகளுக்கான ஏற்பாடுகளை பாகிஸ்தான் செய்து வருகிறது. இரு தரப்பினரையும் மீண்டும் பேச்சுவார்த்தைக் கொண்டுவருவதற்காக தீவிரமான ராஜதந்திர நடவடிக்கைகள் தொடர்ந்து நடப்பதாக பாகிஸ்தானில் உள்ள அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன. இரு தரப்பினரும் இரண்டு வார கால தற்காலிக போர் நிறுத்தத்தை தொடர்ந்து கடைபிடிப்பதால், பாகிஸ்தான் தனது மத்தியஸ்த முயற்சிகளை மீண்டும் தொடங்க இது வழிவகுத்தது.

இதுகுறித்து பாகிஸ்தான் அதிகாரிகள் கூறுகையில்,அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான அடுத்தகட்ட அமைதிப் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. அடுத்த வாரத்தில் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. இதற்கான தேதி இன்னும் முடிவாகவில்லை என்றனர். இந்தநிலையில், பாகிஸ்தான், பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வெளிநாடு பயணத்தைத் தொடங்கியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply