ஹார்முஸ் ஜலசந்தியில் 2 இந்திய கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து இந்தியா கண்டனம்
ஈரான் துறைமுகங்கள் மீதான அமெரிக்க கடற்படையின் நடவடிக்கை தொடர்ந்த நிலையில் ஹார்முஸ் ஜலசந்தியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ள ஈரான், அந்த வழியாக வந்த 2 இந்திய கப்பல்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து பிப்ரவரி மாதம் 28ம் தேதி தாக்குதல் நடத்தின. இதனை தொடர்ந்து போர் தொடங்கியது.
இஸ்ரேல், அமெரிக்கா இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்திய நிலையில், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரானும் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் மீதும் நேரடி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த வாரம் ஈரான் – அமெரிக்கா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. இரண்டு வார கால போர் நிறுத்தத்துக்கு ஈரான் -அமெரிக்கா நாடுகள் ஒப்புக்கொண்டன. எனினும் லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் மீதான தாக்குதலை இஸ்ரேல் தொடர்ந்தது.
அதிபர் டிரம்ப் தலையீட்டின் பேரில் லெபனான் -இஸ்ரேலும் போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டன. லெபனானில் ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு இணங்க முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதற்கு ஈரான் சம்மதித்தது. இதன் எதிரொலியாக அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் ஆகியோர் நேற்று முன்தினம் ஹார்முஸ் ஜலசந்தி வர்த்தக கப்பல்களுக்கு முழுமையாக திறக்கப்பட்டுவிட்டதாக தெரிவித்தனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply