ஹார்முஸ் நீரிணையில் சர்வதேசக் குழுவின் பணிக்கு ஈரான் எதிர்ப்பு

ஹார்மோஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தை பாதுகாப்பதற்காக பிரான்ஸ் மற்றும் பிரிட்டனின் திட்டத்திற்கு ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேற்காசிய நாடான ஈரான் மீது இஸ்ரேல் – அமெரிக்கா இணைந்து கடந்த பிப்ரவரி இறுதியில் போரை துவக்கின. இப்போர் தீவிரமடைந்ததையடுத்து, உலக கச்சா எண்ணெய் போக்குவரத்தில் முக்கிய இடம் வகிக்கும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியது. இதனால், உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததுடன், சர்வதேச நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு வழிவகுத்தது. இந்த சூழலில், கடந்த ஒரு வாரமாக பாரசீக வளைகுடாவில் கப்பல்கள் மீது அடுத்தடுத்து தாக்குதல்கள் நடந்து வருகின்றன.

கடந்த வெள்ளிக்கிழமை ஈரானின் துறைமுகங்கள் மீதான தனது முற்றுகையை மீற முயன்றதாக கூறி 2 ஈரானிய எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதுபோல ஈரானின் எண்ணெய் கப்பல்கள் அல்லது வர்த்தக கப்பல்கள் மீது தாக்குதல் நடந்தால், அமெரிக்க ராணுவ தளங்கள் மற்றும் எதிரி நாட்டு கப்பல்கள் மீது கடுமையான பதிலடி தாக்குதல் நடத்தப்படும் என ஈரானின் புரட்சிகர காவல் கடற்படை எச்சரித்திருந்தது. இதனிடையே ஹார்மோஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தை பாதுகாப்பதற்காக பிரான்ஸ் மற்றும் பிரிட்டனின் திட்டத்திற்கு ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply