தேர்தலை கண்காணிக்க 8000 உள்நாட்டுக் கண்காணிப்பாளர்கள்

எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை கண்காணிக்க 8000 உள்நாட்டுக் கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்தவுள்ளதாக பவ்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. இலங்கையின் சகல மாவட்டங்களுக்கும் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட 50 வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் வரவழைக்கப்படவுள்ளனர். உள்நாட்டு கண்காணிப்பாளர்குளில் 1500 பேர் சுயாதீனமாக இயங்கக் கூடியதாகவும் பொதுவான கண்காணிப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபடுவர்.கண்காணிப்பாளர்களை தயார்படுத்தும் நடவடிக்கைகளில் பவ்ரல் அமைப்பு ஈடுபட்டிருப்பதாக அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply