இலங்கை ஜனாதிபதியுடனான சந்திப்பில் திருப்தியில்லை : டி.ஆர்.பாலு

தமிழர்கள் நலன் குறித்து இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடனான சந்திப்பு திருப்பி அளிக்கவில்லை என்று திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு கூறியுள்ளார். டில்லி சென்றுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை, 14 பேர் கொண்ட தமிழக எம்பிக்கள் குழு, டி.ஆர்.பாலு தலைமையில் இன்று சந்தித்தது.

இதன்போது, இலங்கையில் முள்வேலி முகாம்களில் உள்ள தமிழர்களை, அவர்களின் சொந்த இடத்துக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தமிழர் மறுவாழ்வு பணிகளை விரைவுப்படுத்துமாறும், தமிழர் பிரச்சினைக்கு நிரந்தரமான அரசியல் தீர்வு காண வேண்டும் எனவும் குழுவினர் கோரிக்கை விடுத்தனர்.

இச்சந்திப்புக்கு பின்னர் வெளியே வந்த டி.ஆர்.பாலு கூறுகையில், “ராஜபக்ஷவுடனான சந்திப்பு ஒரு முன்னேற்றம் மட்டுமே. அவருடனான சந்திப்பு திருப்தி அளிக்கவில்லை” என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply