இறுதி மறிப்புச் சமரில் இருப்பதாக புலிகள் அறிவிப்பு.
புலிகளின் இம்ரான் பாண்டியன் சிறப்புப்படையணியின் சிறப்புத் தளபதி வேலவன், ‘நாம் இறுதி மறிப்புச் சமரில் நிற்கின்றோம்’ எனத் கண்டாவளையில் நிகழ்ந்த கூட்டமொன்றில் பேசியதாக புலிகளின் குரல் வானொலிச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது வன்னியில் நிகழும் யுத்தம் ஒரு தீர்மானகரமான நிலைக்குள் வந்து விட்டது என்பதை துல்லியமாக எடுத்துக் காட்டுகின்றது. கிளிநொச்சி – பரந்தன் வரையிலான ஏ-9 பாதை படையினரால் கைப்பற்றப்பட்டால் புலிகளின் இறுதித் தோல்வியை யாராலும் காப்பற்ற முடியாது போகும். ஆகவே, கிளிநொச்சி – பரந்தன் புறநகர் பிரதேசத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கும் இந்த யுத்தம் அனைத்து யுத்தங்களின் தாய் யுத்தமாக கருதக்கூடியது. இந்த யுத்ததில்தான் புலிகளின் வாழ்வும் சாவும் தங்கியுள்ளது என படைத்துறை ஆய்வாளர் ஒருவர் தனது புளொக் பதிவில் கருத்தெழுதியுள்ளார்.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply