மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி கைது

மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி முஹமட் நஷீட் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார். நீதிமன்ற அழைப்பானை மற்றும் பயணத் தடை என்பவற்றை புறக்கணித்த குற்றச்சாட்டுக்களை அடுத்து அவர் கைதுசெய்யப்பட்டதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன. மாலைதீவில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகளை அடுத்து முன்னாள் ஜனாதிபதி முஹமட் நஷீட் பதவி விலக்கப்பட்டார்.

இதனையடுத்து அவரது ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டங்களை நடாத்திவரும் நிலையில் அவருக்கு எதிராக வழக்கு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply