திவிநெகும சட்ட மூலம் குறித்த உயர் நீதிமன்ற விளக்கம் சமலிடம் செல்கிறது

திவிநெகும சட்ட மூலம் தொடர்பிலான உயர் நீதிமன்றத்தின் சட்ட விளக்கம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவிற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில் திவிநெகும சட்ட மூலத்திற்கு மாகாண சபைகளின் அனுமதியினைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

பாராளுமன்றத்தினால் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றிக் கொள்ளப்பட்ட திவிநெகும சட்ட மூலத்திற்கு எதிராகவும் ஆதரவாகவும் 14 மனுக்கள் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டன. இம் மனுக்களை பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக தலைமையிலான மூவரடங்கிய விசேட நீதியமைச்சர் குழு விசாரணைகளை முன்னெடுத்தது.

இதன் போது மாகாண சபைகளில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் திவிநெகும சட்ட மூலம் தொடர்பாக முன் வைத்த நிலைப்பாடுகள் ஆராயப்பட்டன. வடமாகாணத்தை தவிர ஏனைய மாகாணங்களில் நிறைவேற்றிக் கொள்ளப்பட்ட மேற்படி சட்ட மூலத்திற்கு வடமாகாணத்தின் முக்கியத்துவம் குறித்து முன் வைக்கப்பட்ட வாத, பிரதிவாதங்கள் தொடர்பில் உன்னிப்பாக உயர் நீதிமன்ற குழுவினரால் அவதானிக்கப்பட்டது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply