மொஹான் பீரிஸுக்கு எதிரான வழக்கு மீண்டும் தள்ளுபடி

இலங்கையின் புதிய தலைமை நீதிபதி மொஹான் பீரிஸுக்கு எதிராக தொடுக்கப்பட்டு, முன்பு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்ட மோசடிக்குற்றச்சாட்டு தொடர்பான வழக்கொன்றை, மீண்டும் விசாரிக்குமாறு தொடுக்கப்பட்ட மனு ஒன்றை இன்று, செவ்வாய்க்கிழமை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.தலைமை நீதிபதி மொஹான் பீரிஸ் , சட்ட மா அதிபராக இருந்த போது, சுங்கவரி மோசடி தொடர்பான வழக்கொன்றில், தனியார் நிறுவனத்துக்கு ஆதரவாக, வழக்கை சட்டவிரோதமான முறையில் வாபஸ் பெற்றதன் மூலம் அரசுக்கு சுமார் 600 மிலியன் இலங்கை ரூபாய்கள் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுப்பப்பட்டிருந்தது.

எனவே இந்த வழக்கை வாபஸ் பெற்றதன் மூலம், அவர் அரசியல் சட்டத்தை மீறிச்செயல்பட்டார் என்று அறிவிக்குமாறு நாகான்ந்த கொடித்துவக்கு என்ற வழக்கறிஞரால் தொடுக்கப்பட்ட இந்த வழக்கு கோரியிருந்த்து.

அண்மையில் இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த மனுவில் கூறப்பட்டிருக்கும் விஷயங்கள் அடிப்படையற்றவை என்று குறிப்பிட்டிருந்தது.

இந்த வழக்கை ஐந்து நீதிபதிகள் கொண்ட புதிய பெஞ்ச் ஒன்று விசாரிக்க வேண்டும் என்று கொடித்துவக்கு கோரியிருந்தார்.

ஆனால், ஷிரானி திலகவர்த்தன உட்பட மூன்று நீதிபதிகள் அடங்கிய குழு, இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க அரசியல் சட்டத்தில் இடமில்லை என்று தெரிவித்தனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply