யுத்­தக்­குற்­றங்­க­ளுக்கு இந்­தி­யாவும் பொறுப்­புக்­கூற வேண்டும் : விக்­கி­ர­ம­பாகு

இசைப்­பி­ரியா கொலை தொடர்பில் அர­சாங்கம் சுயா­தீன விசா­ர­ணை­களை மேற்­கொள்ள வேண்டும். வெறு­மனே இரா­ணுவ அறிக்­கையை ஆதாரம் காட்­டு­வது ஏற்றுக் கொள்ள முடி­யாது என்று நவ சம சமாஜ கட்­சியின் தலைவர் விக்­கி­ர­ம­பாகு கரு­ணா­ரட்ண தெரி­வித்­துள்ளார். இலங்­கையில் யுத்த குற்­றங்கள் நடந்­த­மைக்கு இந்­தி­யாவும் பொறுப்­பாகும். பல்­லா­யி­ரக்­க­ணக்­கி­லான தமி­ழர்­களை கொன்­றதில் இந்­தி­யா­விற்கும் தண்­டனை கொடுத்­தாக வேண்டும் எனவும் அவர் கூறினார்.இது தொடர்­பாக அவர் மேலும் கருத்துத் தெரி­விக்­கையில்,

இலங்­கையில் நடந்த யுத்தக் குற்­றங்கள் தொடர்பில் விசா­ர­ணை­களை மேற்­கொள்­வதில் அர­சாங்கம் கண்­மூ­டித்­த­ன­மா­கவே செயற்­பட்டு வரு­கின்­றது. இசைப்­பி­ரியா மற்றும் தமிழ் மக்கள் தொடர்பில் சர்­வ­தேச நாடு­க­ளுக்கு இருக்கும் அக்­கறை இலங்கை அர­சாங்­கத்­திற்­கில்லை என்­பதே உண்மை. அர­சாங்கம் கற்­றுக்­கொண்ட பாடங்கள் மற்றும் நல்­லி­ணக்க ஆணைக்­கு­ழுவின் அறிக்­கையில் குறிப்­பிட்ட எதையும் இன்­று­வரை நடை­மு­றைப்­ப­டுத்­தா­துள்­ளது. மக்­களின் நலன்­களை பற்­றியோ யுத்­தத்தில் பாதிக்­கப்­பட்ட தமிழ் மக்­களின் பாது­காப்பு தொடர்­பிலோ அர­சாங்கம் அக்­கறை கொண்­டி­ருந்தால் இன்று வடக்கு மக்­க­ளுக்கு நியா­ய­மா­ன­தொரு தீர்வு கிடைத்­தி­ருக்கும்.

யுத்த குற்­றங்கள் தொடர்பில் இலங்கை இரா­ணுவம் வெளி­யிடும் அறிக்­கை­களை மாத்­திரம் வைத்துக் கொண்டு அர­சாங்கம் ஒரு பக்க அறிக்­கை­யினை மட்டும் வெளி­யி­டு­வது எவ­ராலும் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. நாம் விடு­தலைப் புலி­க­ளுக்­கா­கவோ பிர­பா­க­ர­னுக்­கா­கவோ குரல் கொடுக்­க­வில்லை. நாம் தமி­ழர்­க­ளுக்­கா­கவும் அவர்­களின் உரி­மை­க­ளுக்­கா­கவும் மட்­டுமே குரல் கொடுக்­கின்றோம்.

இலங்­கையில் இடம்­பெற்ற யுத்த குற்­றங்கள் தொடர்பில் இந்­தி­யாவும் பொறுப்­பேற்­றுக்­கொள்ள வேண்டும். சோனி­யா­காந்தி யுத்த கால கட்­டத்தில் இலங்கை அர­சாங்­கத்தை தூண்டி விட்­டவர். இன்று அவர்கள் வாய் மூடி செயற்­பட்டுக் கொண்­டி­ருப்­ப­தனால் அவர்கள் செய்த குற்­றங்கள் சரி­யென்­றாகி விடாது.

ஐ.நா. மனித உரிமை ஆணைக்­குழு இலங்­கைக்கு அழுத்தம் கொடுப்­பதைப் போல் இந்­தியா செய்த குற்­றங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளவும் வேண்டும்.

பல்லாயிரக்கணக்கில் அப்பாவி தமிழ் மக்களை கொன்று குவித்தமைக்கும் வடக்கை மயானமாக மாற்றியமைக்கும் முதலில் இந்தியாவிற்கே தண்டனை கொடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply