ஜெனீவாவில் வழங்கிய உறுதிமொழிகளை மகிந்த நிறைவேற்றவில்லை : சம்பந்தன்

கற்­றுக்­கொண்ட பாடங்கள் மற்றும் நல்­லி­ணக்க ஆணைக்­கு­ழுவின் சிபா­ரி­சு­க­ளையோ அன்றேல் 2013 ஆம் ஆண்டு ஜெனீவா மனித உரிமைப் பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னங்­க­ளையோ அர­சாங்கம் இது­வரை நிறை­வேற்­ற­வில்லை. அதே­போன்று வட­மா­காண சபையின் சீரான இயக்­கத்­துக்கு உத­வு­வ­தாக ஜனா­தி­பதி அளித்த உறு­தி­மொ­ழி­களும் இது­வரை நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை என்று தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப் பின் தலை­வரும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான இரா.சம்­பந்தன் தெரிவித்தார்.மாகாண சபையை முறை­யாக இயங்கச் செய்ய மத்­திய அர­சுடன் ஒத்­து­ழைக்கத் தயா­ராக இருப்­ப­தாக நாங்கள் அர­சுக்கு சமிக்­ஞை­களை வெளிப்­ப­டுத்­தினோம்.முத­ல­மைச்சர் ஜனா­தி­ப­தி­யுடன் நேரில் சென்று சந்­தித்து பேச்சு நடத்­தினார். ஜனா­தி­ப­திக்கும் முத­ல­மைச்­ச­ருக்­கு­மி­டையில் சில முடி­வுகள் எடுக்­கப்­பட்­டன. அவற்றை உட­ன­டி­யாக நிறை­வேற்­று­வ­தாக ஜனா­தி­பதி வாக்­கு­று­தி­களை வழங்­கி­யி­ருந்தார். ஆனால், இவை எது­வுமே நிறை­வேற்­றப்­ப­ட­வி ல்லை என்றார்.

யுத்தம் முடி­வ­டைந்த பின்னர் பொது­மக்­களின் காணிகள் பல சுவீ­க­ரிக்­கப்­பட் ­டுள்­ளன. தொடர்ந்து சுவீ­க­ரிக்­கப்­பட்டு வரு­கின்­றன. பாரம்­ப­ரி­ய­மாக மக்கள் வாழ்ந்த காணி­களில் அவர்கள் தொட ர்ந்து வாழ வழி­யில்­லாத நிலைமை காண ப்­ப­டு­கின்­றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மக்கள் தங்கள் தொழில் நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள முடி­யாது மிகுந்த கஷ்­டங்­களை எதிர்­நோக்கி வரு­கின்­றனர். இரா­ணு­வத்­தி­னரின் நட­வ­டிக்­கைகள் இவ ற்­றுக்குப் பெரும் இடை­யூ­றாக இருந்து வரு­கின்­றன.
கடற்றொ­ழிலை மேற்­கொள்ள முடி­யா­ த­வர்­க­ளாக மீன­வர்கள் கஷ்­டங்­களை அனு­ப­வித்து வரு­கின்­றனர். தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­வர்­களை விடு­தலை செய்­வ­தற்­கான அறி­கு­றி­க ளைக் காண முடி­ய­வில்லை எனவும் தெரிவித்தார்.

அதி­க­ரித்­துள்ள இரா­ணுவப் பிர­சன்­ன த்தை குறைத்து சிவில் அதி­கா­ரி­களின் செயற்­பா­டு­களை அதி­க­ரிக்க வேண்டும். வட­மா­காண சபையை முறை­யாக கொண்டு நடத்த முடி­யாத சூழ்­நி­லையே உரு­வாக்­கப்­பட்டு வரு­கின்­றது. இது குறித்து நாம் அதீத கவனம் செலுத்தி வருகிறோம். இனப்பிரச்சினைக்கான அர சியல் தீர்வு தொடர்பிலும் இழுத்தடிக் கப்பட்டு வருகின்றது. எமது இலக்குகள் குறித்து நாம் எப்போதும் கவனம் செலுத் தியே வருகின்றோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கை விவகாரம் தொடர்பில் ஐ.நா. உயர் ஸ்தானிகர் தனது நேரடிக் கவனத்தை செலுத்தியுள்ளார். ஜெனீவா கூட்டத் தொடர் தொடர்பில் தேவைப் படும் சந்தர்ப்பங்களில் தேவையான விளக்கங்களை வழங்க நாம் தயாராக இருக்கின்றோம் என்றும் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply