அரசுக்கு எதிராக கொழும்பில் நாளை ஆர்ப்பாட்டம் ஐ.தே.க., ஜே.வி.பி, கூட்டமைப்பு, ஜ.க. பங்கேற்பு

ஊழல் மோச­டி­மிக்க ஆட்­சிக்கு எதி­ராக ஐ.தே.க, ஜே.வி.பி, ஜன­நா­யக கட்சி மற்றும் த.தே.கூட்­ட­மைப்பு ஆகிய கட்­சி­களின் ஆத­ர­வுடன் பாரிய எதிர்ப்பு ஆர்ப்­பாட்­ட­மொன்று நாளை செவ்­வாய்க்­கி­ழமை கொழும்பில் நடை­பெ­ற­வுள்­ளது. குறித்த ஆர்ப்­பாட்டம் மரு­தானை, கொம்­ப­னி­தெரு, லிப்டன் சுற்­று­வட்டம் ஆகிய பகு­தி­க­ளி­லி­ருந்து ஆரம்­பிக்­கப்­பட்டு கொழும்பு ஹைட் பார்க்கில் ஒன்­று­கூ­ட­வுள்­ளது என எதிர்க்­கட்­சி­களின் எதிர்ப்பு இயக்கம் அறி­வித்­துள்­ளது.இந்த ஆர்ப்­பாட்­டத்தில் அனைத்து தொழி ற்­றுறை சார்ந்த தொழிற்­சங்­கங்­களும் ஊட­க­வி­ய­லாளர் சங்­கங்­களும் கலந்து கொள்­ள­வுள்­ள­துடன் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான மக்களும் கலந்­து­கொள்ளவுள்ளார்கள் குறித்த ஆர்ப்­பாட்­டத்­தை­ய­டுத்து பொதுக்­கூட்டம் 2மணி க்கு ஹைட்­பார்க்கில் நடை­பெ­ற­வுள்­ளது என்றும் அந்த இயக்கம் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது. இது தொடர்­பாக தேசிய ஊழியர் சங்க காரி­யா­ல­யத்தில் நேற்று நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டின் போதே எதிர்க்­கட்சி எதிர்ப்பு இயக்­கத்தின் ஏற்­பாட்­டா­ள­ரான கரு­ணா­சேன கொடித்­து­வக்கு இதனைத் தெரி­வித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரி­விக்­கையில்,

தற்­போது நாட்டில் என்­று­மில்­லாத வகையில் அநாச்­சாரம் அதி­க­ரித்­துள்­ளது. கசினோ சூதாட்­டத்தை இலங்­கையில் கொண்டு வந்து நாட்டின் கலா­சா­ரத்தை இவ்­வ­ர­சாங்கம் சீர­ழித்­துள்­ளமை மறைக்­கக்­கூ­டிய விட­ய­மல்ல. எனவே இவ்­வ­ரசின் மோச­டி­மிக்க செயற்­பாட்டை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது.

அத்­துடன் தற்­போது மக்­க­ளு­டைய பணம் வீண் விரயம் செய்­யப்­ப­டு­கின்­றது. மக்­க­ளுக்கு எவ்­விதப் பிர­யோ­ச­னமும் அற்ற வகையில் அபி­வி­ருத்­திப்­ப­ணிகள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. மத்­தல விமான நிலையம், அம்­பாந்­தோட்டை மஹிந்த ராஜபக் ஷ துறை­மு­கங்­க­ளினால் மக்கள் எவ்­வித நன்­மை­க­ளையும் பெற்­றுக்­கொள்­ள­வில்லை.

அது மாத்­தி­ர­மின்றி மக்­க­ளு­டைய பணம் கார் ரேஸிற்கு செல­வி­டப்­ப­டு­கி­றது. இதற்கு அப்பால் அர­சாங்­கத்­தி­னதும் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவி­னதும் செயற்­பா­டுகள் சர்­வா­தி­கார ஆட்­சி­களின் பண்­பு­களைக் கொண்­ட­வை­யாக காணப்­ப­டகின்றன. தற்­போது ராஜபக் ஷ குடும்­பத்­தினர் வைத்­த­துதான் சட்­ட­மாக காணப்­ப­டு­கின்­றது. அதே­போன்று எந்­த­வொரு நாட்­டிலும் இல்­லாத வகையில் அமைச்­சர்­களின் தொகை அதி­க­மாக காணப்­ப­டு­கின்­றது. தற்­போது ஹெரோயின் கொள்­வ­னவில் அதி­க­மாக அமைச்­சர்­களே சம்­பந்­தப்­பட்­டுள்­ளமை இவ்­வ­ரசு ஊழல் மோச­டி­மிக்­கது என்­பதை உறு­தி­ப­டுத்து­கி­றது.

எனவே இத­ன­டிப்­ப­டை­யி­லேயே ஜன­வரி 28 ஆம் திக­தி­யான நாளை செவ்­வாய்க்­கி­ழமை பாரிய ஆர்ப்­பாட்­ட­மொன்றை ஏற்­பாடு செய்­துள்ளோம். குறித்த ஆர்ப்­பாட்­டத்­திற்கு ஐக்­கிய தேசிய கட்சி, மக்கள் விடு­தலை முன்­னணி, ஜன­நா­யக கட்சி, தமிழ்த்­தே­சி­யக்­கூட்­ட­மைப்பு, நவ­ச­ம­ச­மா­ஜக்­கட்சி, ஜன­நா­யக மக்கள் முன்­னணி, தேசிய ஐக்­கிய முன்­னணி உள்­ளிட்ட ஏனைய முக்­கிய சில அர­சியல் கட்­சி­களும் அனைத்து தொழிற்­றுறை சார்ந்த தொழிற்­சங்­கங்­களும் ஊட­க­வி­ய­லா­ளரின் சங்­கங்கள் உட்­பட பெரும்­பா­லான மக்கள் கலந்­து­கொள்­ள­வுள்­ளனர்.

இவ்­வார்ப்­பாட்டம் மரு­தானை, கொம்­ப­னி­தெரு மற்றும் லிப்டன் சுற்­று­வட்­டங்­க­ளி­னூ­டாக ஆரம்­பிக்­கப்­பட்டு கொழும்பு ஹைட்­பார்க்கில் ஒன்று கூட­வுள்­ளனர். பின்பு 2 மணி­ய­ளவில் அர­சிற்கு எதி­ரான பொதுக்­கூட்­டமும் ஏற்­பாடு செய்­யப்­ப­டுள்­ளது.

இந்­நி­லையில் குறித்த ஆர்ப்­பாட்­டத்­தின்­படி தொழிற்­சங்­கங்கள் மரு­தா­னை­யி­லி­ருந்தும் ஊட­க­வி­ய­லா­ளர்கள் அமைப்­பு­கள் லிப்டன் சுற்று வட்­டத்­தி­லி­ருந்தும் அர­சியல் கட்­சிகள் கொம்­பனித் தெரு­வி­லி­ருந்தும் தனது எதிர்ப்பு ஊர்­வ­லத்தை ஆரம்­பிப்­ப­தற்கு திட்­ட­மிட்­டுள்­ள­தாக அவர் சுட்­டிக்­காட்­டினார்.

விக்­கி­ர­ம­பாகு கரு­ணா­ரட்ண

இதன்­போது கலா­நிதி விக்­கி­ர­ம­பாகு கரு­ணா­ரட்ண உரை­யாற்­று­கையில்,

தற்­போது நாட்டின் அரச ஊழி­யர்­க­ளுக்கு வழங்­கப்­பட வேண்­டிய சம்­பளக் கொடுப்­ப­ன­வுகளை இது­வரை அரசு வழங்­க­வில்லை. இதனால் அரச ஊழியர்கள் தனது வாழ்க்கையை கொண்டு செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அத்துடன் தற்போது நாட்டில் அநாச்சாரம் அதிகரித்துள்ளதுடன் இந்நிலையிலேயே நாங்கள் இவ்வார்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்தோம். இருப்பினும் இதற்கு இடையூறு விளைவிப்பதற்கு அரசு பொலிஸ் அதிகாரத்தை பொலிஸ் மற்றும் இராணுவத்திற்கு வழங்கியுள்ளது.

எனவே, இவ்வரசின் ஊழல் மோசடிமிக்க ஆட்சிக்கு எதிரானவர்கள் அனைவரும் இவ்வார்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள முன்வர வேண்டுமென்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply