சீனாவின் நீர்மூழ்கிக் கப்பலுக்கு இலங்கை மீண்டும் அனுமதி
இந்தியாவின் கடும் ஆட்சேபனைக்கு மத்தியிலும் சீனாவின் மற்றுமொரு நீர்மூழ்கி கப்பல் இலங்கை வர அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை இந்திய செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளது.இதனடிப்படையில் சீன நீர்மூழ்கி கப்பல் ஒன்று விரைவில் இலங்கைக்கு வரவுள்ளது.சீனாவின் நீர்மூழ்கி கப்பல் ஒன்று ஏற்கனவே இலங்கை வந்து சென்றமை குறித்து இந்தியா இலங்கையிடம் கடும் ஆட்சேபனையை வெளியிட்டிருந்தது.இது இந்து சமுத்திர பிராந்தியத்தில் பதற்றத்தை கொண்டு வரும் என்றும் இந்தியா எச்சரித்திருந்தது.
எனினும் சீனாவின் இந்தக்கப்பல்கள் இராணுவ நோக்கில் இலங்கைக்கு வரவில்லை என்று இலங்கை பதிலளித்திருந்தது.
இந்தநிலையிலேயே மீண்டும் ஒரு நீர்மூழ்கி கப்பலை சீனா, இலங்கைக்கு அனுப்பவுள்ளதாக இந்திய செய்திச்சேவை அறிவித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply