பரிசுத்த பாப்பரசர் ஜனவரி மாதம் இலங்கை வருவதை உறுதி செய்துள்ளார்
பரிசுத்த பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸ் இலங்கை வருவதற்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் துரிதகதியில் இடம்பெற்றுவருவதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; பரிசுத்த பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸ் திருத்தந்தை இலங்கை வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் முன்னெடுப்பதில் அரசாங்கம் தற்போது ஈடுபட்டுவருகின்றது.
பாப்பரசரின் இலங்கை வருகையானது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் விடுக்கப்பட்ட அழைப்பையடுத்து இடம்பெறுகின்றது. கடந்த மாதம் வத்திக்கானுக்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி மற்றும் முதன் பெண்மணி சிரந்தி ராஜபக்ஷ பாப்பரசரின் இலங்கை விஜயத்துக்கான அழைப்பை விடுத்தனர்.
ஜனாதிபதியின் அழைப்பை பாப்பரசர் ஏற்றுக்கொண்டார். அத்துடன் எதிர்வரும் 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கை வருவதனையும் வத்திக்கான் உறுதி செய்தது. பாப்பரசரின் இலங்கை வருகை வெற்றிகரமாக அமைவதற்கு வழி செய்வதற்காக ஜனாதிபதியின் வழி காட்டலின் கீழ் அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுத்துவருகின்றது.
வத்திக்கானில் உள்ள அதிகாரிகளுடன் இலங்கை கத்தோலிக்க திருச்சபையும் அரசாங்க அமைச்சுக்களும் இணைந்து செயற்பட்டுவருகின்றன. பாப்பரசரின் இலங்கை விஜயமானது வெற்றிகரமாக அமையும் என்று அரசாங்கம் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கின்றது.
இதேவேளை எதிர்வரும் ஜனலரி மாதம் 13 ஆம் திகதி இலங்கை வரவுள்ள பரிசுத்த பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸ் திருத்தந்தை 14 ஆம் திகதி கொழும்பில் திருப்பலி ஆராதனையை நடத்தவுள்ளதுடன் அன்றைய தினமே மடு தேவாலயத்துக்கு விஜயம் செய்யவுள்ளதுடன் அங்கு ஆசியுரையை நிகழ்த்தவுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply