சுதந்­தி­ர­தின ஒத்­தி­கையை முன்­னிட்டு பாரா­ளு­மன்ற பகு­தியில் இன்று போக்­கு­வ­ரத்து மட்­டுப்­ப­டுத்தல்

எதிர்­வரும் 04 ஆம் திகதி இலங்­கையின் 64 ஆவது சுதந்­திர தின ஒத்­தி­கையை முன்­னிட்டு பாரா­ளு­மன்ற வளா­கத்தில் இன்று முதல் போக்­கு­வ­ரத்­துக்கள் மட்­டுப்­ப­டுத்­தப் ­ப­ட­வுள்­ளன. இது தொடர்பில் பொலிஸ் தலைமை அலு­வ­லகம் விடுத்­துள்ள அறிக்­கையில் மேலும் குறிப்­பி­ட­ப்பட்­டுள்­ள­தா­வது, சுதந்­திர தின ஒத்­தி­கையை முன்­னிட்டு பாரா­ளு­மன்ற வளா­கத்தில் நாளை முதல் போக்­கு­வ­ரத்­துக்கள் மட்­டுப்­ப­டுத்­தப்­ப­ட­ வுள்­ள­தோடு இன்று காலை 8.30 தொடக்கம் நண்பகல் 12 மணி­வரை பாரா­ளு­மன்ற பாதை மற்றும் பொல்­திவ சந்­தி­யி­னூடான பாரா­ளு­மன்ற பாதை உள்­ளிட்ட சில பாதைகள் மூடப்­பட்டு அதற்குப் பதிலாக விசேட போக்குவரத்து நடை முறை அமுல் படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply