அரசியல் தீர்வு, அடிப்படை பிரச்சினைகள் குறித்து மோடியுடன் பேச்சு நடத்துவோம் : சுமந்திரன்

உத்­தி­யோ­க­பூர்வ விஜயம் மேற்­கொண்டு இலங்கை வரவுள்ள இந்­தி­யப்­பி­ர­தமர் நரேந்­திர மோடி­யு­ட­னான சந்­திப்­பின்­போது தமிழ் மக்­களின் இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு உள்­ளிட்ட முக்­கிய பல விட­யங்கள் தொடர்பில் பேச­வுள்­ள­தாக தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு தெரி­வித்­துள்­ளது. எதிர்­வரும் 13ஆம் திகதி இலங்­கைக்கு வர­வி­ருக்கும் இந்­தி­யப்­பி­ர­தமர் நரேந்­திர மோடி­யுடன் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பினர் சந்­திப்­பினை மேற்­கொள்­ள­வுள்ள நிலையில் சந்­திப் பின்­போது எவ்­வா­றான விட­யங்கள் முன்­வைக்­கப்­ப­டு­மென தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பி­ன­ரிடம் வின­வி­யப்­போதே கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் வெளி­வி­வ­கா­ரங்­க­ளுக்கு பொறுப்­பா­ள­ரு­மான எம்.ஏ.சுமந்­திரன் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இலங்கை விஜ­யத்­தினை மேற்­கொள்­ள­வுள்ள இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடி தமிழ் தேசிய கூட்­ட­மைப்­புடன் சந்­திப்­பினை மேற்­கொள்­ள­வுள்ளார். இதன்­போது எமது தரப்பின் சார்பில் பல முக்­கிய விட­யங்களை முன்­வைக்­க­வுள்ளோம். குறிப்­பாக நாம் தொடர்ச்­சி­யாக கோரி­வரும் தமிழ் மக்­க­ளுக்­கான அர­சியல் தீர்வு தொடர்பில் வலி­ய­றுத்­துவோம். அர­சியல் தீர்வு விட­யத்தில் இந்­திய அரசின் ஈடு­பாடு இருக்க வேண்­டு­மெ­னவும் இலங்கை இந்­திய அனு­ம­தி­யுடன் தமிழ் மக்­க­ளுக்­கான அர­சியல் தீர்­வினை பெற்­றுக்­கொ­டுக்க வேண்­டு­மென்­பது தொடர்­பிலும் நாம்பேசுவோம்.

மேலும் தமிழ் மக்­களின் மீள்­கு­டி­யேற்ற செயற்­பா­டுகள் மிக மந்த கதியில் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன. எனவே அதனை துரி­தப்­ப­டுத்­து­வது தொடர்­பிலும் அர­சியல் கைதி­களின் விடு­தலை தொடர்பாகவும் கவ­னத்தில் கொண்­டு­வ­ர­வுள்­ள­துடன் மீனவர் பிரச்­சினை குறித்தும் முக்­கி­ய­மாக கவ­னத்தில் கொண்­டு­வ­ர­வுள்ளோம்.

வட பகுதி மீன­வர்கள் தொடர்ச்­சி­யாக பாதிக்­கப்­பட்டு வரு­கின்­றனர். அவர்­க­ளுக்­கான பாது­காப்பும் மீன்­பி­டிப்­ப­தற்­கான அனு­ம­தி­களும் தடை­க­ளின்றி பெற்­றுக்­கொ­டுக்கப்பட வேண்டும். எனவே அதற்­கான உட­ன­டித்­தீர்வு அவ­சி­ய­மா­ன­தென்­பதை தெரி­விப்போம்.

அதேபோல் அனல்மின் நிலை­ய­ம் அமைப்­பது தொடர்பில் இலங்கை அரசும் இந்­திய அரசும் உடன்­ப­டிக்கை மேற்­கொண்­டுள்ள நிலையில் அவை வடக்கு மக்­களை பாதிக்­காத வகை­யிலும் மீள் குடி­யேற்­றத்­தினை பாதிக்­காத வகை­யிலும் நடை­பெற வேண்­டு­மென்­ப­தனை தெரி­விப்போம். இன்னும் பல­முக்­கிய விட­யங்கள் தொடர்­பிலும் பேச­வுள்ளோம்.

அத்­தோடு இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி இலங்கை விஜ­யத்தின் ஏற்­பா­டு­களை ஆராயும் நோக்கில் இலங்கை வந்­துள்ள இந்­திய வெளி­வி­வ­கார அமைச்சர் சுஷ்­மா­சு­வ­ரா­ஜூ­டனும் நாளை மதியம் கொழும்பில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளோம். இப்பேச்சுவார்த்தைகளில் தலைவர் சம்பந்தன் உள்ளிட்ட கூட்டமைப்பின் முக்கிய உறுப்பினர்கள் கலந்துகொள்வர்.இதன்போது மீனவர் பிரச்சினையை பிரதானப்படுத்தி பேசுவதுடன் ஏனைய ஒரு சில அரசியல் காரணிகள் தொடர்பிலும் கலந்துரையாடவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply