மஹிந்தவின் இடத்தில் ரணிலும் சம்பந்தனும் இருப்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது: தினேஷ் குணவர்த்தன

ஆட்சி மாற்றம் என்ற பெயரில் சர்­வ­தேச சதித்­திட்­டத்­தினை அரங்­கேற்றச்செய்­யவே தேசிய அர­சாங்கம் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. நிலை­யான அர­சாங்கம் இல்­லாத நாடாக இலங்கை மாறிவிட்­ட­தென குற்றம் சுமத்தும் முன்னாள் அமைச்சர் தினேஷ் குண­வர்த்­தன மஹிந்த ராஜ­ப­க்ஷவின் இடத்தில் சம்­பந்­தனும் ரணில் இருப்­பதை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது எனவும் குறிப்­பிட்டார். முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ மீண்டும் அர­சி­ய­லுக்கு அழைத்துக் கொண்­டி­ருக்கும் நிலையில் பொதுத் தேர்­தலில் எவ்­வாறு போட்­டி­யிடப் போகின்­றீர்கள் என வின­விய போதே அவர் மேற் கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் குறிப்­பிட்­ட­தா­னது,

எதிர்­வரும் பொதுத் தேர்­தலில் ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­ணி­யுடன் மஹிந்த ராஜ­பக்ஷ தலை­மையில் போட்­டி­யிட வேண்­டு­மென்­பதே எமது நோக்கம். அதற்­கான முயற்­சி­க­ளையே இப்­போது பங்­கா­ளிக்­கட்­சிகள் அனை­வரும் ஒன்­றி­ணைந்து மேற்­கொண்டு வரு­கின்றோம். எதிர்­வரும் பொதுத் தேர்­தலில் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியில் அனை­வரும் ஒன்­றி­ணைய வேண்டும். மீண்டும் எமது ஆட்­சி­யினை தக்க வைக்க வேண்டும்.

எமது புதிய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் தலை­வ­ராக இருப்­பதும் முன்னாள் ஜனா­தி­பதி அதே கட்­சியின் சிரேஷ்ட உறுப்­பி­ன­ராக இருப்­பதும் கட்­சி­யினை பலப்­ப­டுத்தி பாது­காக்கும் என்­பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். அதே போல் பாரா­ளு­மன்ற அதி­கா­ரமும் எம்­மிடம் வர­வேண்டும். அதற்கு மிகச் சரி­யான நபர் எமது தலைவர் மஹிந்த ராஜ­ப­க்ஷவே. எனவே அடுத்த பிர­த­ம­ராக மஹிந்த ராஜ­பக்ஷ பத­வி­யேற்று மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் தலை­மை­யி­லான ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்பின் நல்­லாட்­சி­யினை உரு­வாக்க வேண்டும்.

மேலும் நாட்­டினை ஒன்­று­ப­டுத்தி தீவி­ர­வா­தத்­தி­னையும் பிரி­வி­னை­வா­தத்­தி­னையும் முற்­றாக அழித்த எமது தலைவர் மஹிந்த ராஜ­ப­க்ஷவின் அதி­கா­ரங்கள் இன்று சித­ற­டிக்­கப்­பட்டு பிரி­வினை வாதத்­திற்கு ஏற்ற அர­சாங்கம் அடித்­தளம் போட்டு வரு­கின்­றது. அவ­சி­ய­மற்ற தவ­றான எண்­ணத்­தினை மக்கள் மத்­தியில் ஏற்­ப­டுத்தி விட்டு சர்­வ­தே­சத்தின் சதித்­திட்ட எண்­ணங்­களை பூர்த்தி செய்­யக்­கூ­டிய தடை­க­ளற்ற தேசிய அர­சாங்­கத்­தினை இவர்கள் உரு­வாக்கி விட்­டனர்.

மஹிந்த ராஜ­ப­க்ஷவின் அதி­கா­ரங்கள் இன்று ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வி­டமும் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா சம்­பந்­த­னி­டமும் கைய­ளிக்கப் பட்­டுள்­ளது. இவர்கள் இரு­வரும் ஒன்­றி­ணைந்து பிரி­வி­னை­வா­தத்­திற்கு ஏற்­றதும் புலி­க­ளுக்கு ஏற்­ற­து­மான ஈழக்­கொள்­கை­யினை உறு­தி­யாக நிலை நாட்டி வரு­கின்­றனர். இதற்கு இனி ஒரு­போதும் இட­ம­ளிக்க முடி­யாது. எனவே பிரி­வி­னை­யினை தோற்­க­டிக்க வேண்­டு­மாயின் சிங்­கள தேச­மொன்­றினை உரு­வாக்க மஹிந்த ராஜ­பக்ஷ மீண்டும் அர­சி­ய­லுக்கு காலெ­டுத்து வைக்க வேண்டும்.

இன்று அர­சாங்கம் இல்­லாத நாடாக எமது நாடு மாற்­ற­ம­டைந்து விட்­டது. உறு­தி­யான அர­சாங்கம் இருந்த போது எதிர்க்­கட்சி பல­வீ­ன­ம­டைந்­தி­ருந்­தது. ஆன­போ­திலும் நாடு பாது­காப்­பா­கவே இருந்­தது. ஆனால் இப்­போது அர­சாங்கம் இன்று சித­ற­டிக்­கப்­பட்டு விட்­டது. எதிர்க்­கட்சி முற்­றாக அழிக்­கப்­பட்டு விட்­டது. கட்சிகள் இல்லாத அரசியல் தான் இன்று இலங்கையில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. எனவே அடுத்த பொதுத்தேர்தலுடன் மீண்டும் பழைய நிலைமைகளை கொண்டு வர வேண்டும். ஐக்கிய தேசியக் கட்சியின் பிரிவினை வாத அரசியலை கட்டுப்படுத்தி மீண்டும் நாட்டில் நல்லாட்சியினை உருவாக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply