பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார்

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார். அண்மையில் அகுணபொலபெலஸ்ஸ பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில், நாமல் ராஜபக்ஷவின் பாதுகாப்பு பிரிவில் உள்ள ஒருவர் துப்பாக்கியுடன் பிரவேசித்ததாக கூறப்படுகின்றது. இந்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் அளிக்கவே இவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply