பிரதான கட்சிகள் அதிகாரத்தை தக்கவைக்கவே மக்கள் ஆணையை மீறிச் செயற்படுகின்றன
அரசியல் அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ளும் சுயநல நோக்கத்தில் பிரதான கட்சிகள் மக்கள் ஆணையை மீறி செயற்படுகின்றன. ஜனாதிபதி மற்றும் பிரதமரின் செயற்பாடுகள் கீழ்த்தரமானவை என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக குற்றம் சுமத்தியுள்ளார்.மக்களின் மனங்களை வென்ற கட்சி ஜே.வி.பி.யே ஆகவே மக்களை தம்முடன் கைகோர்க்குமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். மக்கள் விடுதலை முன்னணியின் வேட்புமனு பட்டியலில் நேற்று முன்தினம் மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர்கள் கைச்சாத்திட்டனர். இன்று மக்கள் விடுதலை முன்னணியினர் தமது வேட்புமனுக்களை தாக்கல் செய்யவுள்ள நிலை யில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் தெரிவிக்கையிலேயே மேற் கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
மக்களின் முழுமையான ஆதரவுடனேயே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த தோற்கடிக்கப்பட்டார். அதே போல் மைத்திரிபால சிறிசேனவும் மக்களின் ஆதவுடன் தான் ஜனாதிபதியாக தெரிவாகினார். ஆனால் இன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவும் இந்நாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் ஒன்றுபட்டு பொது இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளனர்.
அதேபோல் ஒன்றாக பயணிக்க தயாராகிவிட்டனர். இந்த செயற்பாடானது மிகவும் மோசமான செயற்பாடாகவே நாம் கருதுகின்றோம். மக்களால் ஒதுக்கப்பட்ட நபர்களை அரசியல் சுயலாபத்துக்காக மீண்டும் இணைத்து தனது அதிகாரத்தை தக்கவைக்கும் நோக்கத்தில் ஜனாதிபதி இவ்வாறான மோசமான செயலை செய்துள்ளார். இந்த செயலானது மக்களை முழுமையாக ஏமாற்றும் வகையில் அமைந்துள்ளது. அதேபோல் கடந்த காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் முரண்பட்ட அணியினர், ஐக்கிய தேசியக் கட்சியை மோசமாக விமர்சித்த அணியினர் இன்று மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் கைகோர்த்துள்ளனர். ஆகவே அதிகாரத்தை கைப்பற்ற இவர்கள் எந்த அடிமட்ட செயலையும் செய்ய தயாராக உள்ளனர் என்பது வெளிப்பட்டுவிட்டது.
வேட்புமனு வழங்க முன்னரே இவர்களின் செயற்பாடுகள் மோசமானதாக மாறியுள்ளதெனின் தேர்தல் காலத்திலும், தேர்தலின் பின்னரும் இவர்களின் செயற்பாடுகள் எப்படி அமையும் என்பதை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அதேபோல் இவர்களுக்கு மக்கள் தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும். இந்த தேர்தலில் தூய்மையான கட்சியாகவும் மக்களுடன் நல்ல உறவை பேணும் வகையிலும் தான் மக்கள் விடுதலை முன்னணி களத்தில் இறங்கியுள்ளது. நாம் போட்டியிடும் 22 மாவட்டங்களிலும் மிகவும் பலமான மற்றும் தகுதியான வேட்பாளர்களை நாம் களமிறக்கியுள்ளோம்.
மக்களின் மத்தியில் நல்ல தலைமைகளை தெரிவுசெய்ய வேண்டும், தூய்மையான குற்றவாளிகள் இல்லாத, ஊழல் வாதிகள் இல்லாத நல்ல தலைமைத்துவத்தை பாராளுமன்றத்துக்கு அனுப்ப வேண்டும் என்ற நிலைப்பாடு மக்கள் மத்தியில் உள்ளது. அதேபோல் மக்கள் எதிர்பார்க்கும், விரும்பும் சகல தகுதிகளும் மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர்களிடம் மட்டும் தான் உள்ளது. எல்லா பிரச்சினைகளின் போதும் மக்களை முதலில் சந்திப்பது மக்கள் விடுதலை முன் னணியேயாகும். அனைத்து கட்சி களை விடவும் மக்கள் விடுதலை முன்னணி தூய்மையானது. அதே போல் இம்முறை தேர்தலில் நாம் ஏனைய கட்சிகளை விடவும் முன்னணியில் மக்களின் மனங்களில் இடம்பிடித்துள்ளோம். ஆகவே இம்முறை மக்கள் நல்லதொரு வெற்றியை பெற்றுத்தருவார்கள் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது.
அதேபோல் தேர்தலின் பின்னர் அமையவிருக்கும் பாராளுமன்றம் மக்களின் பிரச்சினைகளை சுட்டிக்காட்டும், மக்களின் உரிமைகளில் வெளிப்படுத்தும் நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்லும் பாராளுமன்றமாக அமைய வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர். ஊழல் வாதிகளையும், சர்வாதிகாரிகளையும் பாராளுமன்றத்துக்கு அனுப்பக்கூடாது என்ற முடிவில் மக்கள் உள்ளனர். ஆகவே மக்கள் விரும்பக்கூடிய வகையில் தகுதியான வகையில் எமது கட்சியை தயார்ப்படுத்தி உள்ளோம். அதேபோல் இம்முறை மக்கள் தமது மனச்சாட்சிக்கு அமைய வாக்களிக்க வேண்டும்.
மக்கள் தமது பிரச்சினைகளுக்கு தீர்வு என்னவென்பதை சிந்தித்து அதற்கமைய வாக்களியுங்கள். மக் களின் மனங்களில் நாம் எப்போ தும் இருப்போம் என்பது உண்மை யேயாகும். ஆனால் யாரை தெரிவு செய்ய வேண்டும் என்ற இறுதி முடிவு மக்களிடம் தான் உள்ளது. நாம் மக்களை நம்புகின்றோம், அவர் கள் எமக்கு நல்ல வெற்றியை ஏற்படுத்திக் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply