மந்திரங்களைப் போட்டு மக்கள் பிரச்னைகளைத் தீர்த்து விட முடியுமா?: மோடி

modiமந்திரங்களைப் போட்டு மக்கள் பிரச்னைகளைத் தீர்த்து விட முடியுமா? என்று பிகாரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.பிகாரில் நாளை 3ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இன்று பிரதமர் மோடி தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.அப்போது அவர் பேசுகையில், 16 மாதங்களாக ஓய்வின்றி உழைத்து வருகிறேன். இது பிகாரின் வருங்காலத்தை நிர்ணயிக்கும் தேர்தல். எனவே மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

இந்த தேர்தலில் நிதிஷ் அரசை மக்கள் தோற்கடித்து விடுவார்கள் என்று அவர்களுக்கே தெரிந்து விட்டது. அதனால்தான், அவர்கள் மந்திரவாதியை தேடிச் சென்றுள்ளனர்.

மந்திரங்களைப் போட்டு மக்கள் பிரச்னைகளை தீர்த்து விட முடியுமா?

16 மாதங்களில் பாஜக அரசு செய்துள்ள சாதனைகளை மக்கள் நன்கு அறிவர். வாக்களிக்க செல்லும் போது பாஜக அரசின் செயல்பாடுகளை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

ஜனநாயகம் வேண்டுமா? மந்திரங்கள் வேண்டுமா? என்பதை மக்களே முடிவு செய்து கொள்ள வேண்டும் என்று கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply