இந்திய – பாக். எல்லையில் ரூ.50 கோடி ஹெராயின் பறிமுதல்

army பஞ்சாப் மாநிலம், இந்தியா – பாகிஸ்தான் எல்லைப்பகுதியான முதியவாலில் உள்ள சோதனை சாவடி அருகே சுமார் 50 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சோதனை சாவடி அருகே ஹெராயின் அடைக்கப்பட்ட பிளாஸ்டிக் குழாய்களை வேலியினுள் கடத்த முயன்ற போது பிடிபட்டதாக எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த பஞ்சாப் மாநில காவல்துறை அதிகாரி கடரியா தெரிவித்தார்.

 

முன்னதாக, பாதுகாப்பு படையினரின் பறிமுதல் நடவடிக்கையின் போது  கடத்தல்காரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். பின்னர் பாதுகாப்பு படையினரின் பதில் தாக்குதலுக்கு பயந்து அங்கிருந்து தப்பி ஓடினர். 10 பாக்கெட்டுகளில் ஒரு கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது.

 

பஞ்சாப் மாநிலத்தின் எல்லைப்பகுதியில் இந்த ஆண்டு மட்டும் இதுவரை 291 கிலோ போதப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply