அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யுமாறு சங்கரி ஜனாதிபதி மைத்திரிபாலவிடம் கோரிக்கை

sangariபல ஆண்டுகளாக சிறையில் வாடும் 200 தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யுமாறு, தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்த சங்கரி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.ஜனாதிபதிக்கு எழுதிய கடிதம் ஒன்றின் மூலமே அவர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் இந்தக் கைதிகள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் நவம்பர் மாத முதல் வாரத்தில் அரசியல் கைதிகள் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படும் என அரசாங்கம் வாக்குறுதி அளித்திருந்தது எனவும் அவர் அதில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் இதுபோன்ற சம்பவங்களில் இவ்வாறான விடுதலை கடந்த காலங்களில் நடந்துள்ளன என குறிப்பிட்டுள்ள சங்கரி, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் சில தமிழ் அமைப்புக்களுக்கு 1980ம் ஆண்டு காலப்பகுதியில் பொது மன்னிப்பு வழங்கப்பட்டதையும் நினைவுகூர்ந்தார்.

ஏதாவது காரணத்துக்காக சிலரை கடுமையான குற்றங்களை இழைத்தவர்கள் என கருதினால் அவர்களை ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு புனர்வாழ்வு முகாமுக்கு அனுப்பிவைக்கலாம், எனவும் அவர் அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply